நாடாளுமன்ற தேர்தலில், இளம் வாக்காளர்கள் மற்றும் முதன்முறையாக வாக்களிக்க இருந்த இளைஞர்கள், இளம்பெண்கள் ஆர்வத்துடன் நேற்று வாக்களித்தனர். வாக்களித்த சந்தோஷத்தில் வாக்குச்சாவடி அருகே நண்பர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
முதன்முறையாக வாக்களித்தவர்கள் மை தீட்டப்பட்ட தங்கள் விரலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ‘வாட்ஸ்-அப்’, ‘பேஸ்-புக்’, ‘டுவிட்டர்’, ‘இன்ஸ்டாகிராம்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ‘ஒரு விரல் புரட்சி’ எனும் பெயரில் பதிவிட்டு மகிழ்ந்தனர். மேலும் பலரது ‘வாட்ஸ்-அப்’களிலும் நேற்று ஓட்டுப்போடுவதை வலியுறுத்தும் வகையிலான படங்களே முகப்பு காட்சியாக வைக்கப்பட்டு இருந்தன.
‘நான் ஓட்டு போட்டுவிட்டேன், நீங்க?’, என்பன போன்ற வாசகங்களையும் நேற்று இளைஞர்கள் வேகவேகமாக சமூக வலைதளங்களில் பரவ செய்தனர். இதுவும் ஒரு வகையில் விழிப்புணர்வாகவே அமைந்தது.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.