புயல் எச்சரிக்கையால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும், கடலுக்குள் சென்றவர்கள் கரைக்குத் திரும்புமாறும் புதுக்கோட்டை மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் மற்றும் மீன்வளத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி முதல் ஏனாதி வரையிலான 32 மீனவ கிராம மக்கள் நாட்டுப்படகு மூலம் மீன்பிடித் தொழில் செய்கின்றனர். இதில் கோட்டைப்பட்டிணம் மற்றும் ஜெகதாபட்டிணத்தில் மட்டும் விசைப்படகு மூலம் மீன்பிடித் தொழில் நடைபெறுகிறது.
தற்போது மீன்பிடித் தடைகாலம் ஜூன் 15 வரை என்பதால் விசைப்படகு மீனவர்கள் தங்களது படகுகளை பழுது பார்க்க மற்றும் வர்ணம் தீட்ட கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். ஆனால் இந்த தடைக் காலம் என்பது குறைந்த அளவு தொலைவு வரை சென்று மீன்பிடிக்கும் நாட்டுப்படகு மீனவர்களுக்கு பொருந்தாது. இதனால் அவர்கள் வழக்கம்போல் தினமும் கடலுக்குச்சென்று மீன்பிடித்து வருகின்றார்கள்.
இந்நிலையில், வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியில் மையம் கொண்டிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட கடலோர காவல்படை பாதுகாப்பு குழும ஆய்வாளர் அன்னலெட்சுமி மற்றும் மீன்வளத்துறை அலுவலர்கள் இணைந்து சென்று கட்டுமாவடி முதல் ஏனாதி வரை உள்ள மீனவ கிராமமங்களில் வானிலை மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி முதல் ஏனாதி வரையிலான 32 மீனவ கிராம மக்கள் நாட்டுப்படகு மூலம் மீன்பிடித் தொழில் செய்கின்றனர். இதில் கோட்டைப்பட்டிணம் மற்றும் ஜெகதாபட்டிணத்தில் மட்டும் விசைப்படகு மூலம் மீன்பிடித் தொழில் நடைபெறுகிறது.
தற்போது மீன்பிடித் தடைகாலம் ஜூன் 15 வரை என்பதால் விசைப்படகு மீனவர்கள் தங்களது படகுகளை பழுது பார்க்க மற்றும் வர்ணம் தீட்ட கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். ஆனால் இந்த தடைக் காலம் என்பது குறைந்த அளவு தொலைவு வரை சென்று மீன்பிடிக்கும் நாட்டுப்படகு மீனவர்களுக்கு பொருந்தாது. இதனால் அவர்கள் வழக்கம்போல் தினமும் கடலுக்குச்சென்று மீன்பிடித்து வருகின்றார்கள்.
இந்நிலையில், வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியில் மையம் கொண்டிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட கடலோர காவல்படை பாதுகாப்பு குழும ஆய்வாளர் அன்னலெட்சுமி மற்றும் மீன்வளத்துறை அலுவலர்கள் இணைந்து சென்று கட்டுமாவடி முதல் ஏனாதி வரை உள்ள மீனவ கிராமமங்களில் வானிலை மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.