புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கடைகளில் எலி விஷ மருந்துகள், கரப்பான் பூச்சி கொல்லி மருந்துகள் மற்றும் கொசுவிரட்டி போன்ற வீட்டு உபயோக பூச்சி மருந்துகளை விற்பனை செய்யவும், இருப்பு வைக்கவும் பூச்சி மருந்து விற்பனை உரிமம் அவசியம் பெற வேண்டும்.
அதனை உரிமம் இல்லாமல் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கான உரிமத்தினை தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு பூச்சி மருந்துக்கு ரூ.500 வீதம் அதிகபட்சம் ரூ.7 ஆயிரத்து 500 செலுத்தி உரிமம் பெற்று கொள்ளலாம். உரிமம் பெறாமல் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது பூச்சி மருந்து சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, அனைத்து பெட்டிக்கடை, மளிகைக்கடை மற்றும் சூப்பர் மார்க்கெட் விற்பனையாளர்கள் உடன் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் உரிமம் பெற்று விற்பனை செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், விற்பனை நிலையங்களில் வீட்டில் பயன்படுத்தும் பூச்சி மருந்துகளை உணவு பொருட்கள் அருகில் வைத்து விற்பனை செய்யாமல் தனியாக இருப்பு வைத்து விற்பனை செய்ய வேண்டும். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மேற்கண்ட வீட்டு உபயோக பூச்சி மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
அதனை உரிமம் இல்லாமல் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கான உரிமத்தினை தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு பூச்சி மருந்துக்கு ரூ.500 வீதம் அதிகபட்சம் ரூ.7 ஆயிரத்து 500 செலுத்தி உரிமம் பெற்று கொள்ளலாம். உரிமம் பெறாமல் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது பூச்சி மருந்து சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, அனைத்து பெட்டிக்கடை, மளிகைக்கடை மற்றும் சூப்பர் மார்க்கெட் விற்பனையாளர்கள் உடன் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் உரிமம் பெற்று விற்பனை செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், விற்பனை நிலையங்களில் வீட்டில் பயன்படுத்தும் பூச்சி மருந்துகளை உணவு பொருட்கள் அருகில் வைத்து விற்பனை செய்யாமல் தனியாக இருப்பு வைத்து விற்பனை செய்ய வேண்டும். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மேற்கண்ட வீட்டு உபயோக பூச்சி மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.