பாரதப் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது என்று அறந்தாங்கி வட்டாட்சியர் பா.சூரியபிரபு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
பிரதம மந்திரியின் விவசாயிகள் திருத்திய கௌரவ ஊக்கத் தொகை திட்டத்தில் இதுவரையில் சேராதவர்களும் அல்லது முறையான பட்டா மாற்றம் இல்லாமல் இருந்து விண்ணப்பங்களை சமர்பிக்காதவர்களுக்கும் தற்போது வாரத்தில் 3 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
இதில் பல விவசாயிகள் தங்களது நிலத்திற்கான பட்டா மாறுதல் செய்வதில்தான் பிரச்னை உள்ளது. உதாரணமாக, விவசாயிகள் நிலத்திற்கான பட்டா அவர்களது தாய் அல்லது தந்தை பெயரில் இருக்கும் பட்சத்தில் வாரிசு அடிப்படையில் பட்டா மாறுதல் செய்துகொள்ள வேண்டும்.
இதற்காக வரும் பிரதி திங்கள்கிழமை அந்த கிராம நிர்வாக அலுவலகங்களில் காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை ஆவணங்களை வழங்கலாம். பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் 1 மணி வரை வழங்கலாம். அதிலும் விடுபட்டவர்கள் பிரதி புதன்கிழமை வட்டாட்சியர் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும் சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு வாரிசு அடிப்படையில் பட்டா மாறுதல் தொடர்பாக மனு அளித்து மேற்படி திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
பிரதம மந்திரியின் விவசாயிகள் திருத்திய கௌரவ ஊக்கத் தொகை திட்டத்தில் இதுவரையில் சேராதவர்களும் அல்லது முறையான பட்டா மாற்றம் இல்லாமல் இருந்து விண்ணப்பங்களை சமர்பிக்காதவர்களுக்கும் தற்போது வாரத்தில் 3 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
இதில் பல விவசாயிகள் தங்களது நிலத்திற்கான பட்டா மாறுதல் செய்வதில்தான் பிரச்னை உள்ளது. உதாரணமாக, விவசாயிகள் நிலத்திற்கான பட்டா அவர்களது தாய் அல்லது தந்தை பெயரில் இருக்கும் பட்சத்தில் வாரிசு அடிப்படையில் பட்டா மாறுதல் செய்துகொள்ள வேண்டும்.
இதற்காக வரும் பிரதி திங்கள்கிழமை அந்த கிராம நிர்வாக அலுவலகங்களில் காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை ஆவணங்களை வழங்கலாம். பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் 1 மணி வரை வழங்கலாம். அதிலும் விடுபட்டவர்கள் பிரதி புதன்கிழமை வட்டாட்சியர் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும் சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு வாரிசு அடிப்படையில் பட்டா மாறுதல் தொடர்பாக மனு அளித்து மேற்படி திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.