மலேசிய அரசு பொதுமன்னிப்பு அறிவிப்பு! 01/08/2019 முதல் 31/12/2019 வரை...



மலேசியாவில் சட்ட விரோதமாகத் தங்கியுள்ள தமிழர்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடியேறிகள் தண்டனை ஏதும் இன்றி வெளியேற ஏதுவாக மீண்டும் ஒருமுறை பொது மன்னிப்பு என்ற சலுகையை அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு.

எதிர்வரும் ஆகஸ்ட் முதல் தேதியில் இருந்து டிசம்பர் 31ஆம் தேதி வரை இந்தப் பொதுமன்னிப்புத் திட்டம் அமலில் இருக்கும் என மலேசிய உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் அறிவித்துள்ளார்.

இந்தப் புதிய திட்டத்தின் கீழ், முறையான ஆவணங்கள் வைத்திராத சட்டவிரோதக் குடியேறிகள் 700 மலேசிய ரிங்கிட் (இந்திய ரூபாயில் சுமார் ரூ.12 ஆயிரம்) அபராதம் செலுத்தினால் தண்டனை ஏதுமின்றி தாய் நாடு திரும்பலாம். இவர்களுடைய பயணச் செலவை சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரகங்கள் ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments