புதுக்கோட்டையில் நாளை 25/07/2019 எரிவாயு நுகர்வோர் குறைகேட்பு முகாம்



புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நாளை 25/07/2019 வியாழக்கிழமை  மாலை 5.00 மணிக்கு எரிவாயு நுகர்வோர் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெறுகிறது.
மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து நுகர்வோர்களின் குறைகளைக் கேட்கவுள்ளார்.

எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் எரிவாயு உருளை முன்பதிவு செய்தல், எரிவாயு உருளை விநியோகத்தில் காணப்படும் குறைபாடுகள் போன்ற பல்வேறு குறைகள் இருப்போர் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி  தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments