எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதன்கிழமை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேரையும் ஆகஸ்ட் 8-ஆம் தேதிவரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டிணம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து முனிவேல் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற முனிவேல், ஸ்டீபன் ராஜ், மணிகண்டன், குமார் உள்ளிட்ட 4 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்தபோது அவ்வழியாக வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி வழக்கு பதிவு செய்து புதன்கிழமை மீனவர்களைக் கைது செய்ததுடன் படகையும் பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட புதுகை மீனவர்கள் 4 பேரும் வியாழக்கிழமை ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி யூட்சன் மீனவர்களை வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து மீனவர்கள் 4 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டிணம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து முனிவேல் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற முனிவேல், ஸ்டீபன் ராஜ், மணிகண்டன், குமார் உள்ளிட்ட 4 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்தபோது அவ்வழியாக வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி வழக்கு பதிவு செய்து புதன்கிழமை மீனவர்களைக் கைது செய்ததுடன் படகையும் பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட புதுகை மீனவர்கள் 4 பேரும் வியாழக்கிழமை ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி யூட்சன் மீனவர்களை வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து மீனவர்கள் 4 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.