எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதான ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 4 பேர் யாழ்ப்பாணம் சிறையில் அடைப்பு



எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதன்கிழமை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேரையும் ஆகஸ்ட் 8-ஆம் தேதிவரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டிணம்  மீன்பிடி துறைமுகத்திலிருந்து முனிவேல் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற முனிவேல், ஸ்டீபன் ராஜ், மணிகண்டன், குமார் உள்ளிட்ட 4 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்தபோது  அவ்வழியாக வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி வழக்கு பதிவு செய்து புதன்கிழமை மீனவர்களைக் கைது செய்ததுடன் படகையும் பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையே கைது செய்யப்பட்ட புதுகை மீனவர்கள் 4 பேரும் வியாழக்கிழமை ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

 வழக்கை விசாரித்த  நீதிபதி யூட்சன் மீனவர்களை வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

 இதையடுத்து  மீனவர்கள் 4 பேரும் யாழ்ப்பாணம்  சிறையில் அடைக்கப்பட்டனர்.

Post a Comment

0 Comments