மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் ஆதீனம் சார்பில் ஏழை, விதவைப் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளதால் தகுதியுடையோர் விண்ணப்பங்களை அனுப்பலாம் என அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆதீனகர்த்தர் தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் ஆதீனம் சார்பில் நாட்டின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டியின் 125-ஆவது ஆண்டு பிறந்த நாளையொட்டி ஏழை, விதவைப் பெண்களுக்கு இலவசமாக தையல் இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளன.
வரும் ஜூலை 30ஆம் தேதி பிறந்த நாள் விழா நடைபெறவுள்ளது. எனவே, ஏழை, விதவைப் பெண்கள் தங்களின் இருப்பிடச் சான்று, விதவைச் சான்று, புகைப்படம் மற்றும் செல்லிடப்பேசி எண்ணுடன் கூடிய முழு முகவரியை எழுதி விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
தவத்திரு ஆதீனகர்த்தர், திலகவதியார் திருவருள் ஆதீனம்,
1120, தஞ்சை சாலை, மச்சுவாடி,
புதுக்கோட்டை- 622001
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி- ஜூலை 27
இதுகுறித்து ஆதீனகர்த்தர் தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் ஆதீனம் சார்பில் நாட்டின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டியின் 125-ஆவது ஆண்டு பிறந்த நாளையொட்டி ஏழை, விதவைப் பெண்களுக்கு இலவசமாக தையல் இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளன.
வரும் ஜூலை 30ஆம் தேதி பிறந்த நாள் விழா நடைபெறவுள்ளது. எனவே, ஏழை, விதவைப் பெண்கள் தங்களின் இருப்பிடச் சான்று, விதவைச் சான்று, புகைப்படம் மற்றும் செல்லிடப்பேசி எண்ணுடன் கூடிய முழு முகவரியை எழுதி விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
தவத்திரு ஆதீனகர்த்தர், திலகவதியார் திருவருள் ஆதீனம்,
1120, தஞ்சை சாலை, மச்சுவாடி,
புதுக்கோட்டை- 622001
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி- ஜூலை 27
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.