இலவச தையல் இயந்திரங்கள்: விண்ணப்பிக்க அழைப்பு



மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் ஆதீனம் சார்பில் ஏழை, விதவைப் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளதால் தகுதியுடையோர் விண்ணப்பங்களை அனுப்பலாம் என அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆதீனகர்த்தர் தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் ஆதீனம் சார்பில் நாட்டின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டியின்  125-ஆவது ஆண்டு பிறந்த நாளையொட்டி ஏழை, விதவைப் பெண்களுக்கு இலவசமாக தையல் இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளன.

வரும் ஜூலை 30ஆம் தேதி பிறந்த நாள் விழா நடைபெறவுள்ளது. எனவே, ஏழை, விதவைப் பெண்கள் தங்களின் இருப்பிடச் சான்று, விதவைச் சான்று, புகைப்படம் மற்றும் செல்லிடப்பேசி எண்ணுடன் கூடிய முழு முகவரியை எழுதி விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

தவத்திரு ஆதீனகர்த்தர், திலகவதியார் திருவருள் ஆதீனம்,
1120, தஞ்சை சாலை, மச்சுவாடி,
புதுக்கோட்டை- 622001

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி- ஜூலை 27

Post a Comment

0 Comments