ஆஸ்திரேலியாவின் சமோவா தீவில் 2019-க்கான காமன்வெல்த் பளுதூக்கும் போட்டிகள் நடைபெற்றது. இதில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிப்பட்டியைச் சேர்ந்த அனுராதா இந்தியாவுக்காகக் கலந்துகொண்டார்.
பெண்களுக்கான 87 கிலோ எடைப் பிரிவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில், அனுராதா ஸ்னாச் முறையில் 100 கிலோவும் கிளன் அண்ட் ஜெர்க் முறையில், 121 கிலோ என 221 கிலோ எடையைத் தூக்கி தங்கப்பதக்கம் பெற்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
அனுராதாவின் வெற்றியை நெம்மேலிபட்டி கிராமத்தினர் வெடி, வெடித்து இனிப்புகள் வழங்கி மகிழ்ந்து கொண்டாடி வருகின்றனர். வெகுசிலரே தேர்ந்தெடுக்கும் பளுதூக்கும் விளையாட்டத்தைத் தேர்ந்தெடுத்து, அதில் மாவட்ட, மாநில, தேசிய போட்டிகளில் ஏராளமான பதக்கங்களைக் குவித்திருக்கிறார்.
எம்.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்திருக்கும் அனுராதா, பளு தூக்கும் போட்டிக்காவே, என்.ஐ.எஸ் என்ற ஒருவருட படிப்பை பஞ்சாபில் படித்துள்ளார். அவர், தஞ்சாவூர் தொகூர் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
நன்றி: விகடன்
பெண்களுக்கான 87 கிலோ எடைப் பிரிவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில், அனுராதா ஸ்னாச் முறையில் 100 கிலோவும் கிளன் அண்ட் ஜெர்க் முறையில், 121 கிலோ என 221 கிலோ எடையைத் தூக்கி தங்கப்பதக்கம் பெற்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
அனுராதாவின் வெற்றியை நெம்மேலிபட்டி கிராமத்தினர் வெடி, வெடித்து இனிப்புகள் வழங்கி மகிழ்ந்து கொண்டாடி வருகின்றனர். வெகுசிலரே தேர்ந்தெடுக்கும் பளுதூக்கும் விளையாட்டத்தைத் தேர்ந்தெடுத்து, அதில் மாவட்ட, மாநில, தேசிய போட்டிகளில் ஏராளமான பதக்கங்களைக் குவித்திருக்கிறார்.
எம்.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்திருக்கும் அனுராதா, பளு தூக்கும் போட்டிக்காவே, என்.ஐ.எஸ் என்ற ஒருவருட படிப்பை பஞ்சாபில் படித்துள்ளார். அவர், தஞ்சாவூர் தொகூர் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
நன்றி: விகடன்
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.