ஆரணியில் தனியார் பள்ளிப் பேருந்தில் பாம்பு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணமங்கலம் அருகே டூலிப் இண்டர்நேஷனல் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம் போல் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளிப்பேருந்து புறப்பட்டபோது ஓட்டுனர் இருக்கை அருகிலிருந்து பாம்பு ஒன்று வெளியே வந்துள்ளது.
அதனைக் கண்ட மாணவர்கள் அலறியுள்ளனர். உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு மாணவர்கள் அவசர அவசரமாக இறக்கப்பட்டனர். பாம்பு பிடிப்பவர்கள் வரவழைக்கப்பட்டு பேருந்திற்குள் இருந்த சுமார் 8 அடி சாரைப் பாம்பை பிடித்தனர்.
ஆரணி டூலிப் பள்ளி வளாகத்தில் புறா, முயல், வாத்து, கோழி, முயல் உள்ளிட்டவை வளர்க்கப்பட்டு வருகின்றன. எனவே அவற்றை பிடிக்க வந்த பாம்பு பேருந்தின் உள்ளே புகுந்து பதுங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.
கண்ணமங்கலம் அருகே டூலிப் இண்டர்நேஷனல் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம் போல் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளிப்பேருந்து புறப்பட்டபோது ஓட்டுனர் இருக்கை அருகிலிருந்து பாம்பு ஒன்று வெளியே வந்துள்ளது.
அதனைக் கண்ட மாணவர்கள் அலறியுள்ளனர். உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு மாணவர்கள் அவசர அவசரமாக இறக்கப்பட்டனர். பாம்பு பிடிப்பவர்கள் வரவழைக்கப்பட்டு பேருந்திற்குள் இருந்த சுமார் 8 அடி சாரைப் பாம்பை பிடித்தனர்.
ஆரணி டூலிப் பள்ளி வளாகத்தில் புறா, முயல், வாத்து, கோழி, முயல் உள்ளிட்டவை வளர்க்கப்பட்டு வருகின்றன. எனவே அவற்றை பிடிக்க வந்த பாம்பு பேருந்தின் உள்ளே புகுந்து பதுங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.