மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரசு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இதில் உதவி உபகரணம் வழங்கும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் புரிந்து அவர்கள் வருவாயை பெருக்கி கொள்ளும் விதமாக மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரம் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் உதவி உபகரணம் வழங்கும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் புரிந்து அவர்கள் வருவாயை பெருக்கி கொள்ளும் விதமாக மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரம் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் 18 வயதிற்கு மேல் 45 வயதிற்குள் கால்கள் பாதிக்கப்பட்டு, கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள், காதுகேளாத, வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகள், மிதமான மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் மற்றும் 75 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளியின் தாய்மார்களுக்கும் அரசால் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரம் ஆண்டுதோறும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
விண்ணப்பிக்கத் தேவையான சான்றுகள்
மேற்படி தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரம் இலவசமாக பெறுவதற்கு
- மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை,
- குடும்ப அட்டை,
- வாக்காளர் அட்டை,
- ஆதார் அட்டை நகல்,
- மார்பளவு புகைப்படம்,
- கல்வி தகுதி சான்று அல்லது வயது சான்று மற்றும்
- தையல் சான்று
ஆகிய சான்றுகளுடன் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், புதுக்கோட்டை என்ற முகவரிக்கு வருகிற 10-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.