புதுக்கோட்டை அடுத்த திருவப்பூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமன்(72). இவர் கடந்த 19ம் தேதி வயிற்று வலி காரணமாகவும், சிறுநீரில் ரத்தம் கலந்து போவதாலும், உடலில் சர்க்கரையின் அளவு அதிகமான காரணத்தினாலும் புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அப்போது சுயநினைவு குறைந்த நிலையில் காணப்பட்ட அவரை மருத்துவர் குழுவினர் எக்ஸ்ரே, அல்ட்ராசவுண்ட், சிடிஸ்கேன் ஆகியவை கொண்டு பரிசோதித்து பார்த்ததில் அவருக்கு இடது சிறுநீரகத்தில் புற்றுநோய் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.
தொடர்ந்து அவருக்கு சர்க்கரையின் அளவை குறைப்பதற்காகவும், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுத்தவும் தகுந்த சிகிச்சைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கடந்த 9ம் தேதி வெங்கட்ராமனுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அப்போது மயக்க மருத்துவர்கள் ரவிக்குமார், சரவணன், புற்றுநோய் மருத்துவர் பாரதிராஜா, சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர் லதா, அறுவை சிகிச்சை நிபுணர் முரளி ஆகியோர் கொண்ட குழுவினர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது இடது சிறுநீரகம் முற்றிலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து சிறுநீரகத்தை பிற உறுப்புகளில் இருந்து முதலில் பிரித்து எடுக்கப்பட்டது. இதேபோல சிறுநீரகத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் ரத்த குழாய்கள் இரண்டிலும் புற்றுநோய் திசுக்களும், ரத்தக்கட்டிகளும் இருப்பது கண்டறியப்பட்டு அவை முழுவதுமாக அகற்றப்பட்டன. இதேபோல அசுத்த ரத்தத்தை எடுத்து செல்லும் சிறுநீரக ரத்தக்குழாய் உடலில் பெரிய ரத்தக்குழாயுடன் இணையும் இடத்தில் ரத்தக்கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டு, அவை அகற்றப்பட்டன. பிறகு படிப்படியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது அவர் முழு உடல்நலத்துடன் உள்ளார்.
இது குறித்து மருத்துவ கல்லூரி டீன் மீனாட்சிசுந்தரம் கூறுகையில், வயதானவர்களுக்கு இந்த சிறுநீரக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இப்படி இருப்பவர்களுக்கு வலி இல்லாமல் சிறுநீரில் ரத்தம் கசியும். இந்த புற்றுநோயை முதலிலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் அவர்கள் முழுவதுமாக குணம்பெற இயலும்.
எனவே புற்றுநோய் வந்தவுடன் உடனே மருத்துவமனையை அணுகுவது அவசியம். வெங்கட்ராமனுக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை தனியார் மருத்துவமனைகளில் ரூ.3 லட்சம் வரை செலவாகும், இந்த அறுவை சிகிச்சை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டு உள்ளது என்றார்.
அப்போது சுயநினைவு குறைந்த நிலையில் காணப்பட்ட அவரை மருத்துவர் குழுவினர் எக்ஸ்ரே, அல்ட்ராசவுண்ட், சிடிஸ்கேன் ஆகியவை கொண்டு பரிசோதித்து பார்த்ததில் அவருக்கு இடது சிறுநீரகத்தில் புற்றுநோய் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.
தொடர்ந்து அவருக்கு சர்க்கரையின் அளவை குறைப்பதற்காகவும், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுத்தவும் தகுந்த சிகிச்சைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கடந்த 9ம் தேதி வெங்கட்ராமனுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அப்போது மயக்க மருத்துவர்கள் ரவிக்குமார், சரவணன், புற்றுநோய் மருத்துவர் பாரதிராஜா, சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர் லதா, அறுவை சிகிச்சை நிபுணர் முரளி ஆகியோர் கொண்ட குழுவினர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது இடது சிறுநீரகம் முற்றிலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து சிறுநீரகத்தை பிற உறுப்புகளில் இருந்து முதலில் பிரித்து எடுக்கப்பட்டது. இதேபோல சிறுநீரகத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் ரத்த குழாய்கள் இரண்டிலும் புற்றுநோய் திசுக்களும், ரத்தக்கட்டிகளும் இருப்பது கண்டறியப்பட்டு அவை முழுவதுமாக அகற்றப்பட்டன. இதேபோல அசுத்த ரத்தத்தை எடுத்து செல்லும் சிறுநீரக ரத்தக்குழாய் உடலில் பெரிய ரத்தக்குழாயுடன் இணையும் இடத்தில் ரத்தக்கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டு, அவை அகற்றப்பட்டன. பிறகு படிப்படியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது அவர் முழு உடல்நலத்துடன் உள்ளார்.
இது குறித்து மருத்துவ கல்லூரி டீன் மீனாட்சிசுந்தரம் கூறுகையில், வயதானவர்களுக்கு இந்த சிறுநீரக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இப்படி இருப்பவர்களுக்கு வலி இல்லாமல் சிறுநீரில் ரத்தம் கசியும். இந்த புற்றுநோயை முதலிலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் அவர்கள் முழுவதுமாக குணம்பெற இயலும்.
எனவே புற்றுநோய் வந்தவுடன் உடனே மருத்துவமனையை அணுகுவது அவசியம். வெங்கட்ராமனுக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை தனியார் மருத்துவமனைகளில் ரூ.3 லட்சம் வரை செலவாகும், இந்த அறுவை சிகிச்சை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டு உள்ளது என்றார்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.