புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகமும், வாசகர் வட்டமும் இணைந்து நடத்தும் ஆக. 16-இல் நூலக தின விழா போட்டிகள்



புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகமும், வாசகர் வட்டமும் இணைந்து வரும் ஆக. 16 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நூலகத் தந்தை எஸ்.ஆர். அரங்கநாதன் பிறந்த நாளையொட்டி நூலக தின விழா கட்டுரை, பேச்சு மற்றும் கவிதைப் போட்டிகளை நடத்தவுள்ளன. 

பள்ளி மாணவர்களில் 6 முதல் 11ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், கல்லூரி மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும் இந்தப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

என்னைக் கவர்ந்த நூல்கள் அல்லது நூலகத்தின் பயன்பாடுகள் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும், என்னைச் செதுக்கிய நூல்கள் அல்லது நூலகத் தந்தை எஸ்ஆர். அரங்கநாதனின் வாழ்வும் பணியும் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும் நடத்தப்படுகிறது.கவிதைப் போட்டிக்கு அந்த நேரத்தில் தலைப்பு வழங்கப்படும்.

 முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்படும்.

போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் வரும் ஆக. 14ஆம் தேதிக்குள் நூலக தொலைபேசி எண் - 04322 22348 அல்லது செல்லிடப்பேசி எண் 99657 48300 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

Post a Comment

0 Comments