முறையான சிகிச்சையும் கிடைப்பதால் நோயாளிகள் நம்பிக்கையுடன் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.
டாக்டர் ஜவாஹிர் உசேன் தலைமையில் 2 பெண் பொது மருத்துவர்கள் உட்பட 7 மருத்துவர்கள் பணியில் உள்ளனர். இவர்கள் 2 அல்லது 3 பேர் விடுமுறையில் சென்று விடுகின்றனர்.
கடந்த ஒரு வருடமாக மகப்பேறு மருத்துவர் இங்கு பணிபுரிந்து வந்தார். இதனால் கர்ப்பிணி பெண்கள் முறையான சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் மகப்பேறு மருத்துவரை சில தினங்களுக்கு முன் வேறு மருத்துவ மனைக்கு மாற்றம் செய்து விட்டதால் அந்தப் பணியிடம் காலியாக உள்ளது.
இதனால் கர்ப்பிணி பெண்கள் முறையான சிகிச்சை கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர்.
ஆகவே நிரந்தர மகப்பேறு மருத்துவரை நியமிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.