புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே குளந்திரான்பட்டியில் சுமார் 7 ஏக்கரிலான வெட்டுக்குளத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை மழை நீர் தேக்கி வைத்து அப்பகுதியில் விவசாயம் செய்யப்பட்டு வந்தது.
பின்னர், படிப்படியாக சுற்றிலும் சாகுபடி செய்து வந்த சில விவசாயிகள், குளம் மற்றும் வாய்க்கால்களை ஆக்கிரமித்தனர். நாளடைவில் குளம் இருந்த சுவடே இல்லாத அளவுக்கு மாறி உள்ளது. இந்த குளம் மாயமானதால் அந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதோடு, இந்த குளத்தை நம்பி விவசாயம் செய்யப்பட்டு வந்த விளை நிலங்களில் பாசனம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டன.
இந்நிலையில் காணாமல் போன இந்த குளத்தை கண்டுபிடித்து தூர்வார வேண்டுமென வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் கடந்த சில மாதங்களாக பல்வேறு துறை அலுவலர்களிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி நூதன முறையில் துண்டறிக்கைகளை வினியோகித்தும், பொது இடங்களில் ஒட்டியும் அப்பகுதி இளைஞர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து நூதன பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள கருத்தாய்வு குழுவை சேர்ந்த துரை குணா கூறிகையில், முழுமையாக ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி உள்ள குளத்தை கண்டுபிடித்து தூர்வார வேண்டுமென கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதற்கு முன்பு வருவாய்த்துறை அலுவலர்களிடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. கறம்பக்குடி வருவாய்த் துறை அலுவலர்கள் வந்து குளத்தை பார்வையிட்டு, குளம் காணாமல் போனதை உறுதி செய்தனர். ஆனால் அதை மீட்பதற்குரிய நடவடிக்கையை எடுக்கவில்லை.
இதனால்தான், அதிகாரிகள் கவனத்தை ஈர்ப்பதற்காக அமைச்சர், ஆளும் கட்சியினரின் பரிந்துரை இல்லாமல் சுயமரியாதை, தன்னொழுக்கம் உள்ள கலெக்டர், வருவாய் அலுவலர், கோட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலரை தேர்வு செய்வது போன்ற துண்டு பிரசுரத்தை அச்சடித்து நேற்றிலிருந்து வினியோகித்து வருகிறோம். அதை பொது இடங்களில் ஒட்டியுள்ளோம் என்றார்.
பின்னர், படிப்படியாக சுற்றிலும் சாகுபடி செய்து வந்த சில விவசாயிகள், குளம் மற்றும் வாய்க்கால்களை ஆக்கிரமித்தனர். நாளடைவில் குளம் இருந்த சுவடே இல்லாத அளவுக்கு மாறி உள்ளது. இந்த குளம் மாயமானதால் அந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதோடு, இந்த குளத்தை நம்பி விவசாயம் செய்யப்பட்டு வந்த விளை நிலங்களில் பாசனம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டன.
இந்நிலையில் காணாமல் போன இந்த குளத்தை கண்டுபிடித்து தூர்வார வேண்டுமென வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் கடந்த சில மாதங்களாக பல்வேறு துறை அலுவலர்களிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி நூதன முறையில் துண்டறிக்கைகளை வினியோகித்தும், பொது இடங்களில் ஒட்டியும் அப்பகுதி இளைஞர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து நூதன பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள கருத்தாய்வு குழுவை சேர்ந்த துரை குணா கூறிகையில், முழுமையாக ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி உள்ள குளத்தை கண்டுபிடித்து தூர்வார வேண்டுமென கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதற்கு முன்பு வருவாய்த்துறை அலுவலர்களிடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. கறம்பக்குடி வருவாய்த் துறை அலுவலர்கள் வந்து குளத்தை பார்வையிட்டு, குளம் காணாமல் போனதை உறுதி செய்தனர். ஆனால் அதை மீட்பதற்குரிய நடவடிக்கையை எடுக்கவில்லை.
இதனால்தான், அதிகாரிகள் கவனத்தை ஈர்ப்பதற்காக அமைச்சர், ஆளும் கட்சியினரின் பரிந்துரை இல்லாமல் சுயமரியாதை, தன்னொழுக்கம் உள்ள கலெக்டர், வருவாய் அலுவலர், கோட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலரை தேர்வு செய்வது போன்ற துண்டு பிரசுரத்தை அச்சடித்து நேற்றிலிருந்து வினியோகித்து வருகிறோம். அதை பொது இடங்களில் ஒட்டியுள்ளோம் என்றார்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.