மீமிசல் கிங்ஸ் ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா…!



புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் மீமிசல் கிங்ஸ் ரோட்டரி சங்கத்தின் நான்காம் ஆண்டு பதவி ஏற்பு விழா கடந்த 28-07-2019 அன்று மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ஜெ. முகமது யூசுப் அவர்கள் தலைவராகவும், அன்பரசன் அவர்கள் செயலாளரும், பட்டாபிராமன் அவர்கள் பொருளாளராகவும்  பணியமர்த்தி ரோட்டரி மாவட்ட ஆளுநர் டாக்டர் ஜமீர் பாஷா அவர்கள் சிறப்புரையாற்றினார்.

முன்னாள் தலைவர் அபுபக்கர் வரவேற்புரையாற்றினார். தலைவர் முகமது யூசுப் பணி ஏற்புரையாற்றினார், துணை ஆளுநர் கராத்தே கண்ணையன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வில்சன் ஆனந்த் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இந் நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும், விருதுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

கோபாலபட்டினம் GPM மக்கள் மேடைக்கு சிறந்த சமூக சேவைக்கான விருது வழங்கப்பட்ட போது

கோட்டைப்பட்டினம் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் அவர்களுக்கு பணி நேர்மைக்கான விருது வழங்கப்பட்ட போது

மீமிசல் இளைஞர் நற்பணி மன்றத்திற்கு சிறந்த சேவைக்கான  விருது வழங்கப்பட்ட போது

அரசுப் பள்ளி ஆசிரியர் அரவிந்த் அவர்களுக்கு சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கப்பட்ட போது 

இந்நிகழ்ச்சியில் மீமிசல் மற்றும் அதனை சுற்றியுள்ள பள்ளி,கல்லூரி ஆசிரியர்கள்,சமூக ஆர்வலர்கள்,ரோட்டரி சங்க நிர்வாகிகள் என திரளாக கலந்துகொண்டனர்.

புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகத்திற்கு GPM MEDIA சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இறுதியாக செயலாளர் அன்பரசன் அவர்கள் நன்றி உரையாற்ற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.






தகவல் & GPM MEDIA செய்திகளுக்காக :  வாசிம் கான் 

Post a Comment

0 Comments