அனைத்து அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு 08.08.2019 நாளை குடற்புழு நீக்க மருந்துகள் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்
திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள் தெரிவித்ததாவது.
பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு 08.08.2019 நாளை குடற்புழு நீக்க மருந்துகள் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்
திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள் தெரிவித்ததாவது.
1 முதல் 19 வயதுடைய குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகளின்
ஆரோக்கியத்தினை மேம்படுத்திடும் வகையில், குடற்புழு நீக்கிட 08.08.2019
நாளை தமிழகம் முழுவதும் குடற்புழு நீக்க மருந்து வழங்கப்பட உள்ளது.
குடற்புழுக்கள் சிறு குழந்தைகளின் ஆரோக்கிய வாழ்வினை மிகவும்
பாதிப்புள்ளாக்குகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி
இந்தியாவில் புழுத்தொற்று பாதிப்பிற்கான வாய்ப்பு அதிகமிருப்பதால், சுமார்
64% குழந்தைகளுக்கு புழுத்தொற்று நீக்கிட சிகிச்சை தேவைப்படுகிறது.
கொக்கிப்புழு, உருண்டைப்புழு ஆகியவை அசுத்தமாக உள்ள சுற்றுப்புற
சூழ்நிலைகள் மூலமாகப் பரவுகிறது. அதிகமான புழுத்தொற்று இருப்பின்,
வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, பசியின்மை, சோர்வு போன்றவை ஏற்படும்.
சிறுவர்கள் அடிக்கடி உடல் நலப்பாதிக்கப்படுவது, படிப்பில்
கவனமின்மை ஆகியவை புழுத்தொற்றின் அறிகுறிகள், இதற்கான
சிகிச்சையாக அல்பெண்டசோல் மாத்திரை 400 மி.கி அல்லது சிரப் 400
மி.கி/10 மி.லி வழங்கப்படுகிறது. 1 வயது முதல் 2 வயது வரை 200 மி.கி
(அல்லது) 5 மி.லி சிரப், 2-19 வயது வரை 400 மி.கி ( ஒரு முழு மாத்திரை)
என்ற அளவில் மருந்துகள் வழங்கப்படுகிறது.
உணவு உண்ணும் முன்பும் கழிவறை சென்று வந்த பின்பும் கைகளை
சுத்தமாக கழுவுதல், சுகாதார கழிவறை பயன்படுத்துதல், காலில் செருப்பு
அணிதல், பாதுகாப்பான குடிநீர், நன்கு சமைக்கப்பட்ட உணவு, கைவிரல்
நகங்களை வெட்டி தூய்மையாக வைத்துக்கொள்ளுதல், காய்கறி மற்றும்
பழங்களை நன்கு கழுவிய பின்னர் பயன்படுத்துதல் ஆகிய முறைகள் மூலம்
புழுத்தொற்று அபாயத்தினைத் தவிர்க்கலாம்.
08.08.2019 நாளை அனைத்து அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும்
அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 19 வயதுடைய குழந்தைகள் மற்றும்
மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள்
மூலம் அல்பெண்டசோல் மாத்திரை வழங்கப்பட உள்ளது. 08.08.2019
வழங்கப்படாத குழந்தைகளுக்கு 16.08.2019 அன்று மாத்திரை வழங்கப்படும்.
08.08.2019 நாளை நடைபெற உள்ள தேசிய குடற்புழு நீக்க மருந்து
வழங்கும் இத்திட்டத்தினை நன்கு பயன்படுத்திக் கொண்டு அனைத்து
குழந்தைகளுக்கும் மாத்திரையினை வழங்கி, குழந்தைகளின் ஆரோக்கிய
வாழ்வினை உறுதி செய்திடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு
மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள்
தெரிவித்துள்ளார்.
Source: https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2019/08/2019080791.pdf
Source: https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2019/08/2019080791.pdf
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.