புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆகஸ்ட், செப். மாதத்தில் முதல்வரின் சிறப்பு குறைகேட்பு



தமிழக முதல்வரின் சிறப்பு குறைகேட்புத் திட்டம் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமங்களிலும் நடத்தப்படும் என மாவட்ட  ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது:

தமிழக முதல்வரின் சிறப்பு குறைகேட்புத் திட்டம் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமங்களிலும் நடத்தப்படும் என முதல்வர் அறிவித்தார்.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து நகர்ப்புற வார்டுகள் மற்றும் கிராமங்களிலும் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் குழு ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அனைத்து கிராமங்களுக்கும் சென்று சம்பந்தப்பட்ட துறைக்கு  அனுப்பும் மனுக்கள் மீது ஒரு மாத காலத்துக்குள் தீர்வு எட்டப்படும்.

இம் மனுக்களின் மீதான தீர்வுக்குப் பின், செப்டம்பர் மாதத்தில் அமைச்சர்கள் தலைமையில் வட்ட அளவிலான விழாக்கள் நடத்தப்படும். விழாவில், பல்வேறு நலத் திட்டப் பயன்கள், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளுக்கும்  தீர்வு காணப்படும்.

இந்தச் சிறப்புத் திட்டத்தில் பொது மக்கள் தங்களின் குறைகளைத் தெரிவித்து தீர்வு கண்டுகொள்ளலாம்.

Post a Comment

0 Comments