கோட்டைப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் இரண்டு நாட்களுக்கு முன் 25/08/2019 ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் கோட்டைப்பட்டினம் சகோதரபுரம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.
அவரது குடும்பம் மிகவும் பின்தங்கி இருந்த நிலையில் செல்வராஜ் உடலுக்கு கோட்டைப்பட்டினம் இளைஞர்கள் பொறுப்பேற்று மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கான அனைத்து உதவிகளும் செய்து இறந்த செல்வராஜ் உடலை மணமேல்குடி பொது மையவாடியில் அடக்கம் செய்தனர்...
மேலும் சகோதரர் செல்வராஜ் அவர்களுடைய குடும்பத்திற்க்கு கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த நெல்லுக்கடை நெய்னா முஹம்மது அவர்கள் மூலமாகவும் மற்றும் அவருடைடைய நண்பர்கள் மூலமாகவும் ரூ 30,000 பொருளாதார உதவி வழங்கப்பட்டது.
இவர்கள் செய்த இந்த உதவிக்காக இறைவனிடம் பிராத்தித்தவர்களாக மனமார்ந்த நன்றியினையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
விபத்தில் மரணம் அடைந்த செல்வராஜ் என்பவருக்கு 5 குழந்தைகள் அதில் 4 பெண் குழந்தைகள் எனவே குடும்பத்தின் வாழ்வாதாரம் கேள்விகுறியாகிவிட்டது..
எனவே இப்பதிவை காண்பவர்கள் கீழ்காணும் அக்கவுண்ட் எண்ணிற்கோ அல்லது அவர்களை தொடர்பு கொண்டோ இறைவனுக்காக தங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் செல்வராஜ் அவர்களின் குடும்ப வங்கி கணக்கிற்கு நேரடியாக தாங்களின் பொருளாதார உதவிகளை வழங்கலாம்.
வங்கி கணக்கு விபரம்:
DEVI.S
ACCOUNT NO : 520101043218756
IFSC CODE : CORP0001378
CORPORATION BANK
KOTTAIPPATTINAM
தாங்களின் மேலான உதவிகளை எதிர்பார்த்தவர்களாக சகோதரர் செல்வராஜ் அவர்களுடைய குடும்பத்தார்கள்...
தகவல் : KPM உற்றுநோக்கு செய்திகள், கோட்டைப்பட்டினம்.
குறிப்பு : மேலுள்ள தகவல் அனைத்தும் GPM மீடியாவால் உறுதி செய்யப்பட்டது.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.