பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கத்தோடு 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை தமிழகத்தில் அமலில் இருந்து வருகிறது.
மேலும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி புதுக்கோட்டை நகராட்சி மூலம் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் ஜிவா.சுப்பிரமணியம் உத்தரவின் பேரில் சுகாதார அலுவலர் டாக்டர்.யாழினி தலைமையில், ஆய்வாளர் பரக்கத்துல்லா, மற்றும் அலுவலர்கள் புதுக்கோட்டை கீழ ராஜ வீதி, பிருந்தாவனம், அண்ணாசிலை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடைகளில் வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இந்த சோதனையின் போது 515 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தடைசெய்யப்பட்ட பொருட்களை வைத்திருந்ததற்காக ரூ.11 ஆயிரத்து 100 அபராதம் விதிக்கப்பட்டது. புதுக்கோட்டை நகர் பகுதியில் மேலும் இதுபோன்ற சோதனைகள் தொடரும் என்றும் பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருப்பர்வள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் எச்சரித்துள்ளார்.
மேலும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி புதுக்கோட்டை நகராட்சி மூலம் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் ஜிவா.சுப்பிரமணியம் உத்தரவின் பேரில் சுகாதார அலுவலர் டாக்டர்.யாழினி தலைமையில், ஆய்வாளர் பரக்கத்துல்லா, மற்றும் அலுவலர்கள் புதுக்கோட்டை கீழ ராஜ வீதி, பிருந்தாவனம், அண்ணாசிலை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடைகளில் வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இந்த சோதனையின் போது 515 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தடைசெய்யப்பட்ட பொருட்களை வைத்திருந்ததற்காக ரூ.11 ஆயிரத்து 100 அபராதம் விதிக்கப்பட்டது. புதுக்கோட்டை நகர் பகுதியில் மேலும் இதுபோன்ற சோதனைகள் தொடரும் என்றும் பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருப்பர்வள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் எச்சரித்துள்ளார்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.