புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆலங்குடி, கீரனூர், திருமயம், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, இலுப்பூர் ஆகிய நீதிமன்றங்களில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
இதில் புதுக்கோட்டை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு அலுவலத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணைகளை மாவட்ட முதன்மை நீதிபதி இளங்கோவன் தொடங்கி வைத்து விசாரணை மேற்கொண்டார்.
இதில் மகிளா கோர்ட்டு நீதிபதி ராஜலட்சுமி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமை குற்றவியல் நீதிபதி சாந்தி, முதன்மை சார்பு நீதிபதி மகாலட்சுமி, நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதிகள் அறிவு, முனிக்குமார் மற்றும் வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
1,111 வழக்குகளுக்கு தீர்வு
இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 5 ஆயிரத்து 267 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதில் வங்கிகளுக்கு வாராக்கடன் தொடர்பான 3 ஆயிரத்து 110 வழக்குகளில், 225 வழக்குகளுக்கு ரூ.1 கோடியே 50 லட்சத்து 98 ஆயிரத்து 629-க்கு தீர்வு காணப்பட்டது. இதேபோல நீதிமன்ற நிலுவையில் இருந்த சிவில் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள் உள்பட மொத்தம் 2 ஆயிரத்து 157 வழக்குகளில் 886 வழக்குகளுக்கு ரூ.2 கோடியே 30 லட்சத்து 66 ஆயிரத்து 528-க்கு தீர்வு காணப்பட்டது.
மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 1,111 வழக்குகளில் ரூ.3 கோடியே 81 லட்சத்து 65 ஆயிரத்து 157-க்கு தீர்வு காணப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலக ஓய்வுபெற்ற நிர்வாக உதவியாளர் தங்கராஜ் மாரியப்பன், முதுநிலை நிர்வாக உதவியாளர் ராஜசேகர் ஆகியோர் செய்திருந்தனர்.
இதில் புதுக்கோட்டை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு அலுவலத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணைகளை மாவட்ட முதன்மை நீதிபதி இளங்கோவன் தொடங்கி வைத்து விசாரணை மேற்கொண்டார்.
இதில் மகிளா கோர்ட்டு நீதிபதி ராஜலட்சுமி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமை குற்றவியல் நீதிபதி சாந்தி, முதன்மை சார்பு நீதிபதி மகாலட்சுமி, நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதிகள் அறிவு, முனிக்குமார் மற்றும் வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
1,111 வழக்குகளுக்கு தீர்வு
இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 5 ஆயிரத்து 267 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதில் வங்கிகளுக்கு வாராக்கடன் தொடர்பான 3 ஆயிரத்து 110 வழக்குகளில், 225 வழக்குகளுக்கு ரூ.1 கோடியே 50 லட்சத்து 98 ஆயிரத்து 629-க்கு தீர்வு காணப்பட்டது. இதேபோல நீதிமன்ற நிலுவையில் இருந்த சிவில் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள் உள்பட மொத்தம் 2 ஆயிரத்து 157 வழக்குகளில் 886 வழக்குகளுக்கு ரூ.2 கோடியே 30 லட்சத்து 66 ஆயிரத்து 528-க்கு தீர்வு காணப்பட்டது.
மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 1,111 வழக்குகளில் ரூ.3 கோடியே 81 லட்சத்து 65 ஆயிரத்து 157-க்கு தீர்வு காணப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலக ஓய்வுபெற்ற நிர்வாக உதவியாளர் தங்கராஜ் மாரியப்பன், முதுநிலை நிர்வாக உதவியாளர் ராஜசேகர் ஆகியோர் செய்திருந்தனர்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.