புதுக்கோட்டை மாவட்ட கிராமங்களில் உள்ள குளங்கள், ஏரிகள் மற்றும் கண்மாய்கள் முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின்கீழ் தூர்வாரப்பட்டு வருவதை போன்று நகர்புறங்களில் உள்ள குளங்களும் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தூர்வாரப்பட்டு மேம்படுத்தப்படுகிறது.
புதுக்கோட்டையில் உள்ள 46 குளங்களில், நகராட்சியின் கட்டுப்பாட்டில் 36 குளங்கள் உள்ளன. புதுக்கோட்டையில் உள்ள குளங்கள் மற்றும் நீர்வரத்து வாரிகள் தூர்வாரப்பட்டு சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளன.
குளங்களுக்கான பழமை வாய்ந்த வரத்துவாரிகள் கண்டறியப்பட்டு, அதில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நகராட்சியில் உள்ள அனைத்து குளங்களுக்கும் நகரின் பிற பகுதிகளில் பெய்யும் மழைநீர் வீணாகாமல் நேரடியாக குளங்களை வந்தடையும். இதன்பயனாக தற்போது பெய்துவரும் மழைநீர் புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள குளங்களில் முழுவதுமாக சேமிக்கப்பட்டு நிலத்தடி நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
தற்போது நகராட்சியில் உள்ள குளங்களை தூர்வாரும் வகையில் 2017-18-ம் நிதியாண்டில் நீர்நிலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை நகராட்சிக்கு ரூ.14 கோடியே 90 லட்சம் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. இந்த நிதியின்மூலம் நகராட்சியில் உள்ள காந்தி பூங்கா குளம், குமுந்தான் குளம், புதுஅரண்மனை குளம், மல்லான்குளம், இப்ராம்ஷா குளம், பழனியப்பா ஊரணி போன்ற பல்வேறு குளங்களை தூர்வாருதல் மற்றும் கரைகளை பலப்படுத்தி நடைபாதை அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதேபோல குளங்களுக்கு வரும் நீர்வரத்து வாய்க்கால்களை முழுவதுமாக சிமெண்டு தளங்களாக மாற்றும் பணி செயல்படுத்தப்படுகிறது. மேலும், வரத்துவாரிகள் 5 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படுகிறது.
புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள குளங்களுக்கு வரும் 12 மழைநீர் வரத்து வாய்க்கால்கள் 6 ½ கிலோ மீட்டர் நீளத்திற்கு முழுவதுமாக சிமெண்டு தரைத்தளமாக அமைக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது. இதனால் மழைநீர் வீணாகாமல் குளங்களுக்கு வரும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதுதவிர மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் அமைக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குளங்களுக்கான பழமை வாய்ந்த வரத்துவாரிகள் கண்டறியப்பட்டு, அதில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நகராட்சியில் உள்ள அனைத்து குளங்களுக்கும் நகரின் பிற பகுதிகளில் பெய்யும் மழைநீர் வீணாகாமல் நேரடியாக குளங்களை வந்தடையும். இதன்பயனாக தற்போது பெய்துவரும் மழைநீர் புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள குளங்களில் முழுவதுமாக சேமிக்கப்பட்டு நிலத்தடி நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
தற்போது நகராட்சியில் உள்ள குளங்களை தூர்வாரும் வகையில் 2017-18-ம் நிதியாண்டில் நீர்நிலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை நகராட்சிக்கு ரூ.14 கோடியே 90 லட்சம் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. இந்த நிதியின்மூலம் நகராட்சியில் உள்ள காந்தி பூங்கா குளம், குமுந்தான் குளம், புதுஅரண்மனை குளம், மல்லான்குளம், இப்ராம்ஷா குளம், பழனியப்பா ஊரணி போன்ற பல்வேறு குளங்களை தூர்வாருதல் மற்றும் கரைகளை பலப்படுத்தி நடைபாதை அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதேபோல குளங்களுக்கு வரும் நீர்வரத்து வாய்க்கால்களை முழுவதுமாக சிமெண்டு தளங்களாக மாற்றும் பணி செயல்படுத்தப்படுகிறது. மேலும், வரத்துவாரிகள் 5 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படுகிறது.
புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள குளங்களுக்கு வரும் 12 மழைநீர் வரத்து வாய்க்கால்கள் 6 ½ கிலோ மீட்டர் நீளத்திற்கு முழுவதுமாக சிமெண்டு தரைத்தளமாக அமைக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது. இதனால் மழைநீர் வீணாகாமல் குளங்களுக்கு வரும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதுதவிர மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் அமைக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.