தமிழ்நாடு பாடநூல் கழகத்திலிருந்து புதுக்கோட்டைக்கு 2-ஆம் பருவ பாடக் குறிப்பேடுகள் வந்தது



மாதிரிபடம்
தமிழ்நாடு பாடநூல் கழகத்திலிருந்து, புதுக்கோட்டை மாவட்டத்துக்கு 23,621 பாடக்குறிப்பேடுகள் சனிக்கிழமை வந்து சேர்ந்தன.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள  பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக,  2-ஆம் பருவத்துக்கான 23,621 பாடக் குறிப்பேடுகள் சனிக்கிழமை லாரி மூலம் புதுக்கோட்டை வந்தன.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இவை இறக்கி வைக்கப்பட்டன.

 தொடர்ந்து மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு இந்தக் குறிப்பேடுகளை அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெறவுள்ளன.

Post a Comment

0 Comments