புதுக்கோட்டையில் 25.09.2019 கேஸ் சிலிண்டர் நுகர்வோர் குறைகேட்பு முகாம்



புதுக்கோட்டை மாவட்டத்தில் எரிவாயு உருளை இணைப்பு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. பி.உமாமகேஸ்வரி அவர்கள் தெரிவித்ததாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் எரிவாயு உருளை இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்களின் குறைகளை தீர்க்கும் வகையில், எரிவாயு உருளை நுகர்வோர் குறைதீர் கூட்டம் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள எரிவாயு உருளை இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்களுக்கு, எரிவாயு உருளை (சிலிண்டர்) நிரப்புவதில் (Refill), பதிவு செய்வதில் உள்ள சிரமங்கள் மற்றும் எரிவாயு சிலிண்டர் வழங்குவதில் காலதாமதம் போன்ற குறைபாடுகள் குறித்து வரப்பெறும் புகார்களைப் பெற்று உரிய நடவடிக்கைகள் எடுத்து தொடர்புடைய எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு எரிவாயு உருளை (சிலிண்டர்) விநியோகத்தை சீர்படுத்த இக்குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆகஸ்டு 2019 க்கான இக்குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 25.09.2019 ஆம் தேதி பிற்பகல் 4.30 மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.

எனவே, எரிவாயு உருளை இணைப்பு குறித்து தங்களது குறைகளை தெரிவிக்க விரும்பும் எரிவாயு உருளை இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் நேரில் தெரிவிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள் தெரிவித்துள்ளார்.

Source: https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2019/09/2019092047.pdf

Post a Comment

0 Comments