புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் விஷ காய்ச்சல் பரவி வருகிறது. மேலும் டெங்கு அறிகுறிகளுடன் தி.மு.க. பிரமுகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானபேர் விஷ காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கறம்பக்குடி அரசு மருத்துவமனை, மழையூர், ரெகுநாதபுரம், வானக்கன்காடு, பாப்பாபட்டி ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் கறம்பக்குடி புதுக்கோட்டை சாலையில் வசிக்கும் தி.மு.க. வட்ட பிரதிநிதி போஸ்குமார் (வயது 40) என்பவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக அவர் கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். பின்னர் போஸ்குமாருக்கு ரத்த பரிசோதனை செய்ததில், அவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போஸ் குமார் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கறம்பக்குடி பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் பாதிப்பால் குழந்தைகள் உள்பட 7 பேர் பலியானார்கள். இதனால் பருவமழை தொடங்கும் காலத்தில் சுகாதாரத்துறை சார்பில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது வழக்கம். இதேபோல இந்த ஆண்டும் சுகாதாரத்துறையினர், பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்று வருகிறது. இருப்பினும் வேகமாக பரவும் காய்ச்சல் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
எனவே காய்ச்சலை கட்டுப்படுத்த கறம்பக்குடி பகுதியில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். மேலும் கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானபேர் விஷ காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கறம்பக்குடி அரசு மருத்துவமனை, மழையூர், ரெகுநாதபுரம், வானக்கன்காடு, பாப்பாபட்டி ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் கறம்பக்குடி புதுக்கோட்டை சாலையில் வசிக்கும் தி.மு.க. வட்ட பிரதிநிதி போஸ்குமார் (வயது 40) என்பவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக அவர் கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். பின்னர் போஸ்குமாருக்கு ரத்த பரிசோதனை செய்ததில், அவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போஸ் குமார் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கறம்பக்குடி பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் பாதிப்பால் குழந்தைகள் உள்பட 7 பேர் பலியானார்கள். இதனால் பருவமழை தொடங்கும் காலத்தில் சுகாதாரத்துறை சார்பில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது வழக்கம். இதேபோல இந்த ஆண்டும் சுகாதாரத்துறையினர், பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்று வருகிறது. இருப்பினும் வேகமாக பரவும் காய்ச்சல் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
எனவே காய்ச்சலை கட்டுப்படுத்த கறம்பக்குடி பகுதியில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். மேலும் கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.