புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தனியார் குடிநீர் நிறுவனங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் திங்கள்கிழமை மேற்கொண்ட திடீர் ஆய்வில், உரிய உரிமம் இன்றிச் செயல்பட்ட 3 நிறுவனங்கள் மீது உற்பத்தி நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஆர். ரமேஷ்பாபு தலைமையிலான குழுவினர், மாவட்டத்தின் பல பகுதிகளில் செயல்பட்டு வந்த தனியார் குடிநீர் விற்பனை நிறுவனங்களில் ஆய்வு செய்தனர்.
இதில் பிஐஎஸ் சான்றிதழ் மற்றும் உணவு உரிமம் இல்லாத விராலிமலை ஒன்றியம், தேவளி குமாரமங்கலம், அறந்தாங்கி, ஆலங்குடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 3 குடிநீர் நிறுவனங்களும் மூடப்பட்டு, தற்காலிக உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டது. மேலும் அவற்றுக்கு பிரிவு 55-இன் கீழ் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
பொதுமக்கள் குடிநீர் பாட்டில்களில் தயாரிப்பு தேதி , பிஐஎஸ் எண், உணவுப் பாதுகாப்பு உரிம எண் இல்லாத குடிநீரை வாங்கி அருந்த வேண்டாம் என்றும், உணவு மற்றும் குடிநீர் சம்பந்தபட்ட புகார்களுக்கு 9944959595 அல்லது 9444042322 ஆகிய தொலைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம் என்றும் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ஆர்.ரமேஷ்பாபு தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஆர். ரமேஷ்பாபு தலைமையிலான குழுவினர், மாவட்டத்தின் பல பகுதிகளில் செயல்பட்டு வந்த தனியார் குடிநீர் விற்பனை நிறுவனங்களில் ஆய்வு செய்தனர்.
இதில் பிஐஎஸ் சான்றிதழ் மற்றும் உணவு உரிமம் இல்லாத விராலிமலை ஒன்றியம், தேவளி குமாரமங்கலம், அறந்தாங்கி, ஆலங்குடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 3 குடிநீர் நிறுவனங்களும் மூடப்பட்டு, தற்காலிக உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டது. மேலும் அவற்றுக்கு பிரிவு 55-இன் கீழ் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
பொதுமக்கள் குடிநீர் பாட்டில்களில் தயாரிப்பு தேதி , பிஐஎஸ் எண், உணவுப் பாதுகாப்பு உரிம எண் இல்லாத குடிநீரை வாங்கி அருந்த வேண்டாம் என்றும், உணவு மற்றும் குடிநீர் சம்பந்தபட்ட புகார்களுக்கு 9944959595 அல்லது 9444042322 ஆகிய தொலைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம் என்றும் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ஆர்.ரமேஷ்பாபு தெரிவித்தார்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.