புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிமராமத்து திட்டப்பணிகள் 40 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்று மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி கூறினார்.
அறந்தாங்கி வட்டத்தில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டப்பணிகளை திங்கள்கிழமை மாலை நேரில் பார்வையிட்டு அவர் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 66 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் குளங்கள், ஏரிகள், மற்றும் கண்மாய்கள் தூர்வாருதல், கரைகளை பலப்படுத்துதல், வரத்து வாய்க்கால்களை சீரமைத்தல் போன்ற பணிகள் நடைபெறுகின்றன.
அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் நற்பவளக்குடி கிராமத்தில் உள்ள நற்பவளக்குடி கண்மாயில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
நற்பவளக்குடி ஏரியில் 3 மதகுகள் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை விரைவாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஆளப்பிறந்தான் கிராமத்தில் உள்ள ஆளப்பிறந்தான் கண்மாய் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் குடிமராமத்து திட்டப் பணிகளில் இதுவரை 40 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளது. மேலும் இம்மாத இறுதிக்குள் இத்திட்டப்பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த ஆய்வின் போது, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் உமாசங்கர், அறந்தாங்கி வட்டாட்சியர் பா.சூரியபிரபு, அறந்தாங்கி வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமாவதி மற்றும் பலர் உடனிருந்தனர்.
அறந்தாங்கி வட்டத்தில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டப்பணிகளை திங்கள்கிழமை மாலை நேரில் பார்வையிட்டு அவர் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 66 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் குளங்கள், ஏரிகள், மற்றும் கண்மாய்கள் தூர்வாருதல், கரைகளை பலப்படுத்துதல், வரத்து வாய்க்கால்களை சீரமைத்தல் போன்ற பணிகள் நடைபெறுகின்றன.
அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் நற்பவளக்குடி கிராமத்தில் உள்ள நற்பவளக்குடி கண்மாயில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
நற்பவளக்குடி ஏரியில் 3 மதகுகள் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை விரைவாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஆளப்பிறந்தான் கிராமத்தில் உள்ள ஆளப்பிறந்தான் கண்மாய் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் குடிமராமத்து திட்டப் பணிகளில் இதுவரை 40 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளது. மேலும் இம்மாத இறுதிக்குள் இத்திட்டப்பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த ஆய்வின் போது, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் உமாசங்கர், அறந்தாங்கி வட்டாட்சியர் பா.சூரியபிரபு, அறந்தாங்கி வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமாவதி மற்றும் பலர் உடனிருந்தனர்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.