கோட்டைப்பட்டிணத்தில் நடைபெற்ற கடற்படை வேலைவாய்ப்பு முகாமில் 90-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தேர்வு..!!



புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணத்தில் தமிழ்நாடு அரசு  மீன்வளத்துறை மற்றும் விசன் பாதுகாப்பு அகாடமி நிறுவனம் இணைந்து இந்தியா கடலோரப்படை மற்றும் கப்பல் படையில் மீனவ இளைஞர்கள் சேர்வதற்கான விழிப்புணர்வு மற்றும் வேலைவாய்ப்பு முகாம் கோட்டைப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்திருக்கும் பேரிடர் மேலாண்மை கட்டிடத்தில் நேற்று 13.09.2019 வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமில் குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்திருக்க கூடிய கட்டுமாவடி முதல் முத்துக்குடா வரை உள்ள மீனவ குடும்பத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட  இளைஞர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த வேலைவாய்ப்பு முகாமில் தகுதியுடைய 90-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.



இந்நிகழ்வில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் (திருச்சி) அவர்கள் தலைமை வகிக்க துணை இயக்குனர் (புதுக்கோட்டை) அவர்கள்,மீன்வளத்துறை ஆய்வாளர் (மணமேல்குடி) அவர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் (கோட்டைப்பட்டினம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தகவல்:

ஜிம் சரீப் அப்துல்லா (தலைவர்)
பெற்றோர் ஆசிரியர் கழகம் அரசு மேல்நிலைப்பள்ளி,
கூட்டுறவு வங்கி இயக்குனர்,
முஸ்லீம் ஜமாத் (வக்ஃபு) நிர்வாகி,
கோட்டைப்பட்டினம்,

Post a Comment

0 Comments