புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மனு கொடுக்க கறம்பக்குடி தாலுகா சேவகன் தெருவை சேர்ந்த பெரியதம்பி (வயது 71) என்பவர் மனைவி சின்னபொன்னுடன் வந்தார். இந்தநிலையில் திடீரென்று பெரியதம்பி ஒரு பாட்டிலில் கொண்டுவந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் உடனடியாக அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.
பின்னர் அவரை திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடுப்பதற்காக வைத்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் கிராம உதவியாளரின் தந்தை எனது பெயரையும், அவரது தந்தை பெயரையும் சேர்ந்து கூட்டுப்பட்டாவாக உத்தரவு பெற்று உள்ளார். இது தொடர்பாக புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியருக்கு நான் புகார் அளித்தேன். இதைத்தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர், கறம்பக்குடி தாசில்தார் மற்றும் நில அளவையர்கள் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து, இந்த இடம் எனக்கு சொந்தமானது எனக்கூறி, அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு சென்றனர்.
இதைத்தொடர்ந்து எனது பட்டா இடத்தை கிராமஉதவியாளரின் தந்தை மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து உள்ளார். இது தொடர்பான நான் ஆலங்குடி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே இந்த வழக்கில் இறுதி உத்தரவு வரும்வரை கிராமஉதவியாளரின் தந்தை எனது இடத்தில் செய்து உள்ள ஆக்கிரமிப்புகளை போலீசார் மூலம் அகற்றி கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த கூட்டத்தில் மனு கொடுக்க கறம்பக்குடி தாலுகா சேவகன் தெருவை சேர்ந்த பெரியதம்பி (வயது 71) என்பவர் மனைவி சின்னபொன்னுடன் வந்தார். இந்தநிலையில் திடீரென்று பெரியதம்பி ஒரு பாட்டிலில் கொண்டுவந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் உடனடியாக அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.
பின்னர் அவரை திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடுப்பதற்காக வைத்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் கிராம உதவியாளரின் தந்தை எனது பெயரையும், அவரது தந்தை பெயரையும் சேர்ந்து கூட்டுப்பட்டாவாக உத்தரவு பெற்று உள்ளார். இது தொடர்பாக புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியருக்கு நான் புகார் அளித்தேன். இதைத்தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர், கறம்பக்குடி தாசில்தார் மற்றும் நில அளவையர்கள் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து, இந்த இடம் எனக்கு சொந்தமானது எனக்கூறி, அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு சென்றனர்.
இதைத்தொடர்ந்து எனது பட்டா இடத்தை கிராமஉதவியாளரின் தந்தை மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து உள்ளார். இது தொடர்பான நான் ஆலங்குடி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே இந்த வழக்கில் இறுதி உத்தரவு வரும்வரை கிராமஉதவியாளரின் தந்தை எனது இடத்தில் செய்து உள்ள ஆக்கிரமிப்புகளை போலீசார் மூலம் அகற்றி கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.