ஆவுடையார்கோவில் முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் பொன்பேத்தி இரா.சுந்தர்ராஜன் முன்றாம் ஆண்டு நினைவாக இந்தப் போட்டி நடத்தப்பட்டது.
மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் 91 மாட்டுவண்டிகள் கலந்துகொண்டன.
பெரிய மாடு பிரிவில் 16 வண்டிகள் கலந்து கொண்டதில் முதலாவதாக வந்த பரளிசெல்விகம்பம் அழகுபிள்ளை மாடுகளுக்கு ரூ.30 ஆயிரத்து மூன்றும், 2ஆவதாக வந்த கடம்பூர் இளைய ஜமீன் கருணாகர ராஜா மாடுகளுக்கு ரூ.28 ஆயிரத்தி மூன்றும், 3ஆவதாக வந்த சூரக்குண்டு தெய்வேந்திரன் மாடுகளுக்கு ரூ.26ஆயிரத்தி மூன்றும் என ரொக்கப்பரிசு மற்றும் நினைவு கோப்பைகள் வழங்கப்பட்டன.
நடுமாடு பிரிவு: நடுமாடு பிரிவில் 25 மாட்டு வண்டிகள் கலந்துகொண்டதில் முதலாவதாக வந்த வைரிவயல் வீரமுனியாண்டவர் மாடுகளுக்கு முதல் பரிசாக 28ஆயிரத்தி மூன்றும், இரண்டாவதாக வந்த கல்லுப்பட்டி கே.ஏ.அம்பாள் மாடுகளுக்கு ரூ.26 ஆயிரத்தி மூன்றும், மூன்றாவதாக வந்த மாங்குடி குமார் மாடுகளுக்கு 24ஆயிரத்தி மூன்றும் என ரொக்கப்பரிசு மற்றும் கோப்பைகளும் வழங்கப்பட்டன.
சின்னமாடு பிரிவு: சின்னமாடு எனப்படும் கரிச்சான்மாடு பிரிவில் 50 மாட்டு வண்டிகள் கலந்துகொண்டதில், முதலாவதாக வந்த பொய்கைவயல் முத்துக்கருப்பர் மாடுகளுக்கு 26 ஆயிரத்தி மூன்றும், இரண்டாவதாக வந்த கட்டுமாவடி செந்தூரான் டிராவல்ஸ் மாடுகளுக்கு 24ஆயிரத்தி மூன்றும், மூன்றாவதாக வந்த பந்தயபுரம் துளசிநாயனார் மாடுகளுக்கு 22 ஆயிரத்தி மூன்றும் என ரொக்கப்பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, இராமநாதபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. போட்டிகளை ஏராளமானவர்கள் கண்டு களித்தனர்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.