நாகப்பட்டினத்தில் வெறும் 500 கிராம் எடையுடன் பிறந்த குழந்தையை 5 மாதங்களாக இன்குபேட்டரில் வளர்த்து அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்
.நாகை மாவட்டம் சாமந்தப்பேட்டையை சேர்ந்த செல்வமணி- லதா தம்பதிக்கு கடந்த மே மாதம் 10-ஆம் தேதி நாகை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை முழு வளர்ச்சி காலத்தை அடைந்தவுடன் பிறந்த போதிலும் இந்த குழந்தையின் எடை வெறும் 580 கிராம் இருந்தது.
எலும்பும் தோலுமாக இருந்த குழந்தையின் உயிரை எப்படி காப்பாற்றுவது என அதன் பெற்றோர் கவலை கொண்டனர். இதையடுத்து அக்குழந்தை அந்த மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவில் சேர்க்கப்பட்டது.
2.1 கிலோ எடை
அக்குழந்தையை இன்குபேட்டரில் வைத்த மருத்துவர்கள் செயற்கை சுவாச கருவியை 24 மணி நேரமும் வைத்திருந்தனர். கிட்டதட்ட 5 மாதங்களாக இன்குபேட்டரில் வைக்கப்பட்ட குழந்தை தற்போது 2.1 கிலோ எடையை எட்டியுள்ளது.
மருத்துவர்கள்
குழந்தையின் ஆரோக்கியம் நன்றாக உள்ளது. தானாகவே சுவாசிக்கிறது. இதையடுத்து குழந்தையை அதன் பெற்றோரிடம் மருத்துவர்கள் ஒப்படைத்தனர்.
மருத்துவர்கள் வெற்றி
5 மாதமாக போராடி குழந்தையின் உயிரை மீட்டெடுத்த மருத்துவர்களின் முயற்சி சாதனையாகவே பார்க்கப்படுகிறது. மருத்துவர்களுக்கு குழந்தையின் பெற்றோர் மட்டுமின்றி அங்கிருந்த நோயாளிகள், பொதுமக்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
ஜான்சிராணி
கிட்டதட்ட 147 நாட்கள் இன்குபேட்டரில் வைக்கப்பட்ட குழந்தைக்கு ஜான்சிராணி என பெயரிடப்பட்டது. நாட்டிலேயே குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைகள் பட்டியலில் ஜான்சிராணி 3 ஆவது இடத்தை பிடித்துள்ளார். முதல் இரு இடங்களில் 380 கிராம் மற்றும் 580 கிராம் எடையுடன் பிறந்த குழந்தைகள் இடம்பெற்றுள்ளன.
.நாகை மாவட்டம் சாமந்தப்பேட்டையை சேர்ந்த செல்வமணி- லதா தம்பதிக்கு கடந்த மே மாதம் 10-ஆம் தேதி நாகை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை முழு வளர்ச்சி காலத்தை அடைந்தவுடன் பிறந்த போதிலும் இந்த குழந்தையின் எடை வெறும் 580 கிராம் இருந்தது.
எலும்பும் தோலுமாக இருந்த குழந்தையின் உயிரை எப்படி காப்பாற்றுவது என அதன் பெற்றோர் கவலை கொண்டனர். இதையடுத்து அக்குழந்தை அந்த மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவில் சேர்க்கப்பட்டது.
2.1 கிலோ எடை
அக்குழந்தையை இன்குபேட்டரில் வைத்த மருத்துவர்கள் செயற்கை சுவாச கருவியை 24 மணி நேரமும் வைத்திருந்தனர். கிட்டதட்ட 5 மாதங்களாக இன்குபேட்டரில் வைக்கப்பட்ட குழந்தை தற்போது 2.1 கிலோ எடையை எட்டியுள்ளது.
மருத்துவர்கள்
குழந்தையின் ஆரோக்கியம் நன்றாக உள்ளது. தானாகவே சுவாசிக்கிறது. இதையடுத்து குழந்தையை அதன் பெற்றோரிடம் மருத்துவர்கள் ஒப்படைத்தனர்.
மருத்துவர்கள் வெற்றி
5 மாதமாக போராடி குழந்தையின் உயிரை மீட்டெடுத்த மருத்துவர்களின் முயற்சி சாதனையாகவே பார்க்கப்படுகிறது. மருத்துவர்களுக்கு குழந்தையின் பெற்றோர் மட்டுமின்றி அங்கிருந்த நோயாளிகள், பொதுமக்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
ஜான்சிராணி
கிட்டதட்ட 147 நாட்கள் இன்குபேட்டரில் வைக்கப்பட்ட குழந்தைக்கு ஜான்சிராணி என பெயரிடப்பட்டது. நாட்டிலேயே குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைகள் பட்டியலில் ஜான்சிராணி 3 ஆவது இடத்தை பிடித்துள்ளார். முதல் இரு இடங்களில் 380 கிராம் மற்றும் 580 கிராம் எடையுடன் பிறந்த குழந்தைகள் இடம்பெற்றுள்ளன.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.