மழைக்காலங்களில் பரவும் நோய்களுள் டெங்கு கொடியது. பொதுவாக டெங்கு சாதாரண காய்ச்சல் அறிகுறிகளுடன் தொடங்கும். சாதாரண காய்ச்சல்தான் என்று அசட்டையாக இருந்து விட்டால் பாதிப்பு அதிகமாகிவிடும்.ஒருசில அறிகுறிகளை கொண்டு டெங்கு நோயின் தாக்கத்தை கண்டறிந்துவிடலாம்.
ஆரம்ப கட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளை கண்டறிவது கடினம். சாதாரணமாக ஆரம்பிக்கும் காய்ச்சல் அதிகரித்து கொண்டிருந்தால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். டெங்குவை பரப்பும் கொசு கடித்த நான்கு முதல் 7 நாட்களுக்குள் அதிக காய்ச்சல் வெளிப்படும். டெங்கு காய்ச்சல் பொதுவாக 104 டிகிரி அளவை தாண்டிவிடும். இத்தகைய அதிக வெப்பநிலை அளவை கட்டுப்படுத்த மருந்துகளை சாப்பிடுவதை தவிர முழுமையாக ஓய்வு எடுப்பதும், திரவ உணவுகளை அதிகம் உட்கொள்வதும் இன்றியமையாதது. அவை டெங்குவை எதிர்த்து போராடுவதற்கு உதவும். ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். அதனால் ரத்த பரிசோதனை மேற்கொண்டு ரத்த அணுக்களின் அளவு போதுமானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டியது அவசியமானது.
டெங்கு காய்ச்சலின் மற்றொரு அறிகுறியாக திடீரென்று கடுமையான தலைவலி ஏற்படும். அப்படி வலி அதிகமாக இருக்கும் சமயத்தில் கண் பகுதியில் குளிர்ச்சித் தன்மை நிலவும். காய்ச்சலை காட்டிலும் தலைவலி தீவிரமாக இருந்தால் அது டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி.
உடல்வலியும் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிதான். ஆரம்பத்தில் மூட்டுகள், தசை நாண்கள், எலும்பு பகுதிகளில் வலி அதிகமாக இருக்கும். டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டால் தசைகளில் வலி அதிகரிக்கும். டெங்கு காய்ச்சலுக்கு பிந்தைய அறிகுறியாக நாள்பட்ட மூட்டு வலி உண்டாகும். இந்த காய்ச்சலின்போது உடல் வலி அதிகமாக இருப்பதற்கு உடலில் வைட்டமின்கள், தாதுக்கள் குறைவதே காரணமாகும். ஆதலால் டெங்கு பாதிப்புக்குள்ளாகுபவர்கள் வைட்டமின் உள்ளிட்ட ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
டெங்கு காய்ச்சலின் மற்றொரு அறிகுறியாக சருமத்தில் சிவப்பு நிறத்தில் தடிப்புகள் உருவாகும். சில சமயத்தில் அதிலிருந்து ரத்தம் வழியும். இந்த தடிப்புகள் காய்ச்சல் உருவான ஓரிரு நாட்களில் வெளிப்படும். அப்போது நோயாளிகளின் கண்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். சருமமும் வெளிர் நிறத்திற்கு மாறும்.
காய்ச்சல் குறைய தொடங்கும்போதும் தடிப்புகள் உருவாகும். இவற்றை குணப்படுத்துவதற்கு குறிப்பிட்ட சிகிச்சை முறைகள் இல்லை. டாக்டர்களிடம் ஆலோசித்து மாய்ச்சுரைசிங் கிரீம்களை பயன்படுத்தலாம்.
டெங்கு காய்ச்சல் பரவுவதை தவிர்க்க சரியான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். டெங்கு கொசுக்கள் வீட்டின் உட்புற பகுதிகள், வீட்டை சுற்றியுள்ள நீர் நிலைகளில்தான் இனப்பெருக்கம் செய்யும். அதனால் வீட்டையும், சுற்றுப்புற பகுதிகளையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கொசு கடிப்பதை தவிர்க்க உடலை முழுவதும் மூடும் ஆடைகளை அணிய வேண்டும். கொசுக்களை விரட்டும் நிவாரணிகளையும் பயன்படுத்தலாம். படுக்கை அறையில் கொசு வலைகளை பயன்படுத்துவது நல்லது. பகலில் தூங்குவதாக இருந்தாலும் கொசு வலையை பயன்படுத்த வேண்டும்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.