மரண அறிவித்தல்:- கோபாலப்பட்டிணம் பழைய காலனியை சேர்ந்த ஜமாலியா அவர்கள்..



கோபாலப்பட்டிணம் பழைய காலனியை சேர்ந்த மகுபலி, ஹைதர் அலி, கலீல், சத்தார் மற்றும் நியாஸ் ஆகியோரின் தாயாரும் மாப்பிள்ளை சாதிக் மற்றும் ரமலான் கான் அவர்களின் மாவும்மா ஆகிய சீமதெண்ணபிள்ளை வீட்டு ஜமாலியா அவர்கள் நேற்று 16/10/2019 புதன்கிழமை இரவு 10.30 மணியளவில் வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

ஜனஷா நல்லடக்கம் இன்று 17.10.2019 வியாழக்கிழமை காலை 11.00 மணியளவில் கோபாலப்பட்டிணம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

ஜனாஸா தொழுகை மற்றும் ஜனாஸாவைப் பின்தொடர்தல் ஆகியவற்றின் சிறப்பு.

யார் ஜனாஸா தொழுகையில் பங்கேற்கின்றாரோ அவருக்கு ஒரு கிராஅத் நன்மையுண்டு யார் அடக்கம் செய்யப்படும்வரை கலந்து கொள்கின்றாரோ அவருக்கு இரண்டு கிராஅத்கள் நன்மை உண்டென நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது இரண்டு கிராஅத்கள் என்றால் என்ன? என வினவப்பட்டது அதற்கவர்கள் ”இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)” என்றார்கள்.   அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

தகவல்: முஹம்மது ராவுத்தர்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments