புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி, கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் மீன்களை காய வைக்க உலர்தளம் இல்லாததால் மணலில் காய வைக்கின்றனர்.எனவே இப்பகுதிகளில் உடனடியாக மீன்பிடி உலர்தளம் அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்தப் பகுதிகளில் மட்டும் பல கோடி ரூபாய்க்கு மீன்கள் மற்றும் இறால்கள் வெளி மாவட்டம் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை வாங்குவதற்காக உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் லாரி மற்றும் சரக்கு ஆட்டோவில் வந்து வாங்கி செல்கின்றனர். இதேபோல ஆந்திரா, கேரளா, கர்நாடகம், புதுச்சேரி போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வாகனங்களில் வந்து செல்கின்றனர்.
இவர்கள் மீன்கள், நண்டுகள், இறால்கள் போன்றவற்றை போட்டி போட்டு வாங்கி சென்றனர். விசைப்படகில் வரக்கூடிய இறால் மற்றும் பெரிய வகை மீன்கள் அனைத்தும் விற்பனையாகின்றன. மீனவர்களின் வலையில் சிக்கும் டன் கணக்கில் உள்ள சிறிய வகையான மீன்கள் கடலோரப் பகுதிகளில் காய வைக்கப்பட்டு கருவாடாக பயன்படுத்தப்படுகிறது. இப்படி காய வைக்கப்படும் மீன்களுக்கு என்று தனியாக உலர்தளம் இல்லாததால் கடலோரப் பகுதிகளில் உள்ள தரைப்பகுதிகளிலும் மற்றும் மணல் பகுதிகளிலும் காய வைக்கின்றனர்.
இதனால் பல நேரங்களில் கடுமையான காற்றினால் மணல் ஒட்டிக்கொள்கிறது. மழை நேரங்களில் தரையானது சேரும் சகதியாக மாறுகிறது. மழை நேரங்களில் காய வைக்கும் போது மழையில் நனைந்து வீணாகிறது. இதனால் மீனவர்களுக்கு பல ஆயிரம் நஷ்டம் ஏற்படுகிறது.
எனவே தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுத்து இந்தப் பகுதிகளில் மீன்களை காயவைக்க உலர்தளம் ஏற்படுத்தி மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்தப் பகுதிகளில் மட்டும் பல கோடி ரூபாய்க்கு மீன்கள் மற்றும் இறால்கள் வெளி மாவட்டம் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை வாங்குவதற்காக உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் லாரி மற்றும் சரக்கு ஆட்டோவில் வந்து வாங்கி செல்கின்றனர். இதேபோல ஆந்திரா, கேரளா, கர்நாடகம், புதுச்சேரி போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வாகனங்களில் வந்து செல்கின்றனர்.
இவர்கள் மீன்கள், நண்டுகள், இறால்கள் போன்றவற்றை போட்டி போட்டு வாங்கி சென்றனர். விசைப்படகில் வரக்கூடிய இறால் மற்றும் பெரிய வகை மீன்கள் அனைத்தும் விற்பனையாகின்றன. மீனவர்களின் வலையில் சிக்கும் டன் கணக்கில் உள்ள சிறிய வகையான மீன்கள் கடலோரப் பகுதிகளில் காய வைக்கப்பட்டு கருவாடாக பயன்படுத்தப்படுகிறது. இப்படி காய வைக்கப்படும் மீன்களுக்கு என்று தனியாக உலர்தளம் இல்லாததால் கடலோரப் பகுதிகளில் உள்ள தரைப்பகுதிகளிலும் மற்றும் மணல் பகுதிகளிலும் காய வைக்கின்றனர்.
இதனால் பல நேரங்களில் கடுமையான காற்றினால் மணல் ஒட்டிக்கொள்கிறது. மழை நேரங்களில் தரையானது சேரும் சகதியாக மாறுகிறது. மழை நேரங்களில் காய வைக்கும் போது மழையில் நனைந்து வீணாகிறது. இதனால் மீனவர்களுக்கு பல ஆயிரம் நஷ்டம் ஏற்படுகிறது.
எனவே தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுத்து இந்தப் பகுதிகளில் மீன்களை காயவைக்க உலர்தளம் ஏற்படுத்தி மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.