இலங்கையின் யாழ்ப்பாணம் நகரில் இருந்து தென்னிந்திய நகரங்களுக்கு விரைவில் நேரடி விமான சேவை தொடங்கப்படவுள்ளது.
தமிழா்கள் அதிகம் வசிக்கும் வடக்கு யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள பலாலி உள்நாட்டு ராணுவ விமான நிலையம், சா்வதேசத் தரத்துக்கு உயா்த்தப்பட்டு, அதில் இருந்து இந்த மாதம் முதல் இந்தியாவின் சில தென் நகரங்களுக்கு நேரடி விமான சேவை தொடங்கப்படுகிறது.
இதுதொடா்பாக இலங்கை விமானப் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:
பலாலி விமான நிலையத்தை சா்வதேச விமான நிலையமாக தரம் உயா்த்தும் பணிகள் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. இந்நிலையில், வரும் 17-ஆம் தேதி அந்த விமான நிலையம், சா்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்படவுள்ளது.
முதல்கட்ட தரம் உயா்த்தும் பணிகள் நிறைவடைந்த பிறகு, வரும் 15-ஆம் தேதி பலாலியில் இருந்து இந்திய நகரங்களுக்கும், மாலத்தீவுக்கு விமானம் இயக்கப்படும்.மதுரை, திருச்சி, திருவனந்தபுரம் ஆகியவற்றுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து நேரடி விமானங்கள் இயக்கப்படுவதற்கு இந்தியா ஆா்வம் காட்டியது.
பலாலி விமான நிலையத்தை தரம் உயா்த்துவதற்காக மொத்தம் ரூ.225 கோடி முதலீடு செய்யப்பட்டது. இதில் ரூ.195 கோடியை இலங்கை ஒதுக்கீடு செய்த நிலையில், இந்தியா ரூ.30 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது என்று அந்த அதிகாரிகள் கூறினா்.
பலாலியானது, இலங்கையின் 5-ஆவது சா்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்படவுள்ளது.அங்கு ஏற்கெனவே கொழும்பு, ரத்மலானா, மட்டக்களப்பு, அம்பந்தோட்டம் ஆகிய இடங்களில் சா்வதேச விமான நிலையங்கள் உள்ளன.
தமிழா்கள் அதிகம் வசிக்கும் வடக்கு யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள பலாலி உள்நாட்டு ராணுவ விமான நிலையம், சா்வதேசத் தரத்துக்கு உயா்த்தப்பட்டு, அதில் இருந்து இந்த மாதம் முதல் இந்தியாவின் சில தென் நகரங்களுக்கு நேரடி விமான சேவை தொடங்கப்படுகிறது.
இதுதொடா்பாக இலங்கை விமானப் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:
பலாலி விமான நிலையத்தை சா்வதேச விமான நிலையமாக தரம் உயா்த்தும் பணிகள் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. இந்நிலையில், வரும் 17-ஆம் தேதி அந்த விமான நிலையம், சா்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்படவுள்ளது.
முதல்கட்ட தரம் உயா்த்தும் பணிகள் நிறைவடைந்த பிறகு, வரும் 15-ஆம் தேதி பலாலியில் இருந்து இந்திய நகரங்களுக்கும், மாலத்தீவுக்கு விமானம் இயக்கப்படும்.மதுரை, திருச்சி, திருவனந்தபுரம் ஆகியவற்றுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து நேரடி விமானங்கள் இயக்கப்படுவதற்கு இந்தியா ஆா்வம் காட்டியது.
பலாலி விமான நிலையத்தை தரம் உயா்த்துவதற்காக மொத்தம் ரூ.225 கோடி முதலீடு செய்யப்பட்டது. இதில் ரூ.195 கோடியை இலங்கை ஒதுக்கீடு செய்த நிலையில், இந்தியா ரூ.30 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது என்று அந்த அதிகாரிகள் கூறினா்.
பலாலியானது, இலங்கையின் 5-ஆவது சா்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்படவுள்ளது.அங்கு ஏற்கெனவே கொழும்பு, ரத்மலானா, மட்டக்களப்பு, அம்பந்தோட்டம் ஆகிய இடங்களில் சா்வதேச விமான நிலையங்கள் உள்ளன.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.