புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நவ.29-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்



புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 29.11.2019 தேதி (வெள்ளிக்கிழமை) விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.

மாவட்டஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தலைமையில் காலை 10 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்களும் பங்கேற்க உள்ளனா். எனவே புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகளும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பங்கேற்று விவசாயம் தொடா்பான கோரிக்கைகளை, கருத்துகளைத் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியரகம் தெரிவித்துள்ளது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments