கோபாலப்பட்டிணத்தில் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ரஹ்மானிய்யா பெண்கள் மதரஸா கட்டிடம் இடிப்பு...



புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணம் அரஃபா தெரு (பெண்கள் மதரஸா தெரு) கரிக்கடை அருகில் உள்ள ரஹ்மானிய்யா பெண்கள் மதரஸா கடந்த 50 ஆண்டுகளாக ஓட்டு கட்டிடத்தில் இயங்கி வந்தது.
இந்த மதரஸாவில் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த வயது வந்த பெண்களுக்கு மூன்று வருட ஆலிமா பட்ட படிப்பு வகுப்பும் 12 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு காலை மற்றும் மாலை நேர குர்ஆன் வகுப்பும் நடைபெற்று வந்தது. ஓட்டு கட்டிடம் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் பராமரிப்பின்றி பழுதடைந்துவிட்டது. எனவே இந்த ஓட்டு கட்டிடத்தை இடித்து விட்டு இரண்டு மேல்தளங்கள் கொண்டு புதிய கான்கிரீட் கட்டிடம் கட்டி தருவதாக கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த தனவந்தர் ஜமாத்திடம் கூறியதால் அவை இப்பொழுது இடிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.


எனவே இங்கு நடைபெற்று வந்த பெண்கள் மதரஸா கடந்த 25.10.2019 வெள்ளிக்கிழமை அன்று முதல் அரஃபா தெரு தங்கமஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.

ரஹ்மானிய்யா பெண்கள் மதரஸா பற்றிய வரலாறு தெரிந்து கொள்வோம்...


இந்த ரஹ்மானிய்யா பெண்கள் மதரஸா கோபாலபட்டிணம் ஆலி ஜனாப் மவ்லான மவுலவி அல்ஹாஜ் M.S.M ஹனீப் ஆலிம், சாஹிப் அவர்களால் தமது சொந்த இடத்தில் தமது சொந்தப் பொருளால் கட்டி 08.03.1970 அன்று வக்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.





தகவல் : A. அமீர்

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments