எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கோட்டைப்பட்டிணம் மற்றும் ஜெகதாப்பட்டிணம் விசைபடகு மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு..



புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணம் மற்றும் ஜெகதாப்பட்டிணம்  பகுதியிலிருந்து நேற்று (02.11.2019) 350 விசைபடகுகளில் 2000- திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

இதில் கோட்டைப்பட்டிணம்  பகுதியை சேர்ந்த  ஆரோக்கியதாஸ் (60),  என்பவருக்கு சொந்தமான  விசைப்படகில் அதே ஊரைச் சேர்ந்த ராஜ்குமார் (34), மோகன்(28), நாகராஜ் (30), மைக்கேல் (34)  ஆகிய நான்கு மீனவர்களும் ஜெகதாப்பட்டிணம் பகுதியை சேர்ந்த வாசு (45) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே ஊரைச் சேர்ந்த தினேஷ் (24), சாரதி (35), அரவிந்த் (23), சிவகுமார் (30) ஆகிய 4 மீனவர்களும்  இந்திய எல்லையான நெடுந்தீவு அருகே 32 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியே ரோந்து பணியில் ஈடுப்பட்ட இலங்கை கடற்படையினர் 8 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி கைது செய்தனர். மற்றும் அவர்களது விசைபடகையும் பறிமுதல் செய்து இலங்கைக்கு இழுத்து சென்றனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் ராணுவ முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோட்டைப்பட்டிணம் மற்றும் ஜெகதாப்பட்டிணம் விசைபடகு மீனவர்கள் 8 பேர் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments