சுய தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடனுதவி பெற இணைதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் உமா மகேஸ்வரி அவர்கள் தெரிவித்து உள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் மூலம் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், சுய தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடனுதவி வங்கிகள் மூலம் பெறுவதற்கு இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பை தேடி நகர்புற பகுதிகளுக்கு இடம் பெயர்தலை தடுக்கவும், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக, நலிவடைந்த பிரிவினர் சுயதொழில் தொடங்கி வாழ்க்கை தரத்தை மேம்படுத்த, தமிழக அரசின் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் மாவட்ட தொழில் மையம் மூலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 8-ம் வகுப்புத் தேர்ச்சி அடைந்தவர்கள், சுயமாக வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில் தொடங்க ரூ.1 லட்சம், ரூ.3 லட்சம் மற்றும் ரூ.10 லட்சம் வரையிலான திட்டங்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் உதவிக்கு வங்கிகளுக்கு விண்ணப்பங்கள் பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது. தற்போது வியாபாரம் மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கு திட்ட மதிப்பீடு உச்ச வரம்பு முறையே ரூ.1 லட்சம் மற்றும் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.1½ லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி ஆணையிடப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து வங்கிக்கடன் பெறும் பயனாளிகளுக்கு திட்ட மதிப்பில் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரை தமிழக அரசின் மானியமாக வழங்கப் படும். இத்திட்டத்தின்கீழ் சுயதொழில் தொடங்கி பயன்பெற விரும்புவோர், www.msm-e-o-n-l-i-ne.tn.gov.in/uye-gp என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளரை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் மூலம் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், சுய தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடனுதவி வங்கிகள் மூலம் பெறுவதற்கு இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பை தேடி நகர்புற பகுதிகளுக்கு இடம் பெயர்தலை தடுக்கவும், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக, நலிவடைந்த பிரிவினர் சுயதொழில் தொடங்கி வாழ்க்கை தரத்தை மேம்படுத்த, தமிழக அரசின் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் மாவட்ட தொழில் மையம் மூலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 8-ம் வகுப்புத் தேர்ச்சி அடைந்தவர்கள், சுயமாக வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில் தொடங்க ரூ.1 லட்சம், ரூ.3 லட்சம் மற்றும் ரூ.10 லட்சம் வரையிலான திட்டங்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் உதவிக்கு வங்கிகளுக்கு விண்ணப்பங்கள் பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது. தற்போது வியாபாரம் மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கு திட்ட மதிப்பீடு உச்ச வரம்பு முறையே ரூ.1 லட்சம் மற்றும் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.1½ லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி ஆணையிடப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து வங்கிக்கடன் பெறும் பயனாளிகளுக்கு திட்ட மதிப்பில் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரை தமிழக அரசின் மானியமாக வழங்கப் படும். இத்திட்டத்தின்கீழ் சுயதொழில் தொடங்கி பயன்பெற விரும்புவோர், www.msm-e-o-n-l-i-ne.tn.gov.in/uye-gp என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளரை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.