கோபாலப்பட்டிணம் பழைய காலனியில் குவிந்துகிடக்கும் குப்பைகள்..!! தொற்று நோய் பரவும் அபாயம்..!!!



புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியை சேர்ந்த கோபாலப்பட்டிணத்தில் பழைய காலனி பகுதியில் முன்பு பெண்கள் பெருநாள் தோப்பு செல்லும் சந்தில் தேங்கிக்கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றமும், நோய் தொற்று பரவும் அபாயம் நிலவி வருகிறது.

அந்த வழியாகத்தான் அரண்மனை தோப்பு ஊற்று பகுதிக்கு சென்று குடிநீர் எடுத்து வரும் சூழல் உள்ளது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அந்த பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் அங்கு குப்பை கொட்டுவதற்கு குப்பை தொட்டிகள் எதுவும் வைக்கப்படவில்லை. எனவே அந்த பகுதி மக்கள் குப்பைகளை திறந்த வெளியில் கொட்டி செல்கின்றனர்.

எனவே அந்த பகுதியில் உள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும் அந்த பகுதியில் குப்பை தொட்டி அமைத்து தினமும் அவை அகற்றப்பட வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்ககையாக உள்ளது.

ஊராட்சி நிர்வாகம் விரைந்து தகுந்த நடவடிக்கை எடுத்து தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







புகைப்படம் உதவி: முகம்மது முபாரக்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments