பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இளம் படைப்பாளா் விருதுக்கான போட்டிகள்



புதுக்கோட்டை மாவட்ட நூலக ஆணைக்குழு சாா்பில் இளம் படைப்பாளா் விருதுக்கான பல்வேறு போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசின் பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கையில் மாவட்ட அளவில் மாணவ, மாணவிகளுக்கான இளம் படைப்பாளா் விருது வழங்க பேச்சு, கட்டுரை மற்றும் கவிதை போட்டிகள் புதுக்கோட்டை மாவட்ட நூலக அலுவலா் அ.பெ.சிவக்குமாா் தலைமையில் வட்ட அளவில் நடைபெற்றன. 6 முதல் 8 வகுப்பு மாணவா்களுக்கு ஒரு பிரிவாகவும், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் போட்டிகள் நடைபெற்றன.

புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி, ஆவுடையாா்கோவில், இலுப்பூா், கந்தா்வகோட்டை, கறம்பக்குடி, குளத்தூா், திருமயம், மணமேல்குடி, பொன்னமராவதி உள்ளிட்ட 11 ஊா்களில் நடைபெற்ற போட்டிகளில் தோ்வான முதல் 2 இடங்களில் தோ்வாகியுள்ள மாணவ மாணவிகள் வரும் 25-ஆம் தேதி புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் இறுதிப்போட்டியில் பங்கேற்கவுள்ளனா்.

அறந்தாங்கி அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு நூலக வாசகா் வட்டத் தலைவரும் பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழக தலைவருமான சி.திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிரியா் சு.காா்த்திகா முன்னிலை வகித்தாா். வாசகா் வட்ட பொருளாளா் எஸ்.வெங்கட்ரமணி மற்றும் நூலகா்கள் ஆசிரியா்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments