கார்த்திகை மாதத்தையொட்டி கட்டுமாவடி, மணமேல்குடி மார்க்கெட்டுகளில் மீன்கள் விலை குறைவு



கார்த்திகை மாதத்தையொட்டி கட்டுமாவடி, மணமேல்குடி மார்க்கெட்டுகளில் மீன்கள் விலை குறைந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் பெரிய மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு மட்டும் சுமார் 15-க்கும் மேற்பட்ட மீன் ஏலக்கடைகள், இறால் கம்பெனிகள் செயல்படுகின்றன. இங்கு கட்டுமாவடி, மணமேல்குடி, மீமிசல், பொன்னகரம், புதுக்குடி, சேதுபாவாசத்திரம், மந்திரிப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் பிடிக்கும் மீன்களும், ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள விசைப்படகு மீனவர்கள் பிடிக்கும் மீன்களும் விற்பனைக்கு வருகிறது. அதுமட்டுமில்லாமல் ராமநாதபுரம், பாம்பன், ராமேஸ்வரம், தூத்துக்குடி, காரைக்கால், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளிலிருந்து சரக்கு வேன்கள் மூலம் தினமும் மீன்கள் விற்பனைக்கு வருகிறது. இந்த மீன்களை வாங்குவதற்காக மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, பட்டுக்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் சரக்கு வாகனங்களில் தினமும் வந்து செல்கின்றனர்.

மீன்கள் விலை குறைவு

இந்நிலையில் தற்போது கார்த்திகை மாதம் என்பதால் அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு செல்வார்கள். இதனால் அசைவத்துக்கு விடை கொடுத்து, சைவ உணவுக்கு மாறியுள்ளனர். இதனால் கட்டுமாவடி, மணமேல்குடி மீன் மார்க்கெட்டுகளில் மீன்கள் விலை குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.300-க்கு விற்ற முரள்மீன், தற்போது ரூ.200-க்கும், ரூ.350-க்கு விற்ற செங்கனி மீன் ரூ.250-க்கும், ரூ.400-க்கு விற்ற நண்டு, தற்போது ரூ.300-க்கும் விற்கப்படுகிறது. இதேபோல் பொடி வகை மீன்களின் விலையும் குறைந்துள்ளது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments