புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே குளிக்கும்போது சிறுவனின் மூக்குக்குள் சென்று வேதனை கொடுத்த மீனை அன்னவாசல் அரசு மருத்துவர் லாவகமாக அகற்றி சிறுவனின் வேதனையைப் போக்கினார்.
அன்னவாசல் அருகே உள்ள மண்ணவேளாம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம். இவரின் மகன் அருள்குமார்(12). இவன் அன்னவாசல் பகுதியில் உள்ள கிணற்றில் நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்துள்ளான். அப்போது, எதிர்பாராத விதமாக சிறுவனின் மூக்குக்குள் சின்ன சிலேபி மீன் சென்றுவிட்டது. இதனால் சிறுவன் கடும் வேதனையடைந்தான். வலியால் தாங்க முடியாமல் சிறுவன் துடித்துள்ளான்.
சிறுவனின் உறவினர்கள் சிறுவனை அருகே உள்ள அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர் கதிரவன், உடனே மூக்கின் உள்ளே இருந்த மீனை வெளியே எடுக்கத் திட்டமிட்டார். அதன்படி, கதிரவன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் சிகிச்சையளித்து லாவகமாக சின்ன சிலேபி மீனை வெளியே எடுத்தனர். மீன் வெளியே வந்த பிறகு பழைய நிலைக்கு சிறுவன் திரும்பினான்.
இதுபற்றி மருத்துவர் கூறியதாவது, ``மாணவன் குளித்துக் கொண்டிருக்கும்போது, அவருக்கே தெரியாமல் சின்ன சிலேபி மீன் அவனது மூக்குக்குள் சென்றுள்ளது. உறவினர்கள் யாரும் வெளியே எடுக்க முயற்சி செய்யாமல், உடனே மருத்துவமனைக்கு அழைத்துவந்தனர். உடனே சிறுவனுக்கு சிகிச்சையளித்து சிறுவன் மூக்கில் இருந்த மீனை உயிருடனே மீட்டுவிட்டோம்" என்றார்.
அன்னவாசல் அருகே உள்ள மண்ணவேளாம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம். இவரின் மகன் அருள்குமார்(12). இவன் அன்னவாசல் பகுதியில் உள்ள கிணற்றில் நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்துள்ளான். அப்போது, எதிர்பாராத விதமாக சிறுவனின் மூக்குக்குள் சின்ன சிலேபி மீன் சென்றுவிட்டது. இதனால் சிறுவன் கடும் வேதனையடைந்தான். வலியால் தாங்க முடியாமல் சிறுவன் துடித்துள்ளான்.
சிறுவனின் உறவினர்கள் சிறுவனை அருகே உள்ள அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர் கதிரவன், உடனே மூக்கின் உள்ளே இருந்த மீனை வெளியே எடுக்கத் திட்டமிட்டார். அதன்படி, கதிரவன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் சிகிச்சையளித்து லாவகமாக சின்ன சிலேபி மீனை வெளியே எடுத்தனர். மீன் வெளியே வந்த பிறகு பழைய நிலைக்கு சிறுவன் திரும்பினான்.
இதுபற்றி மருத்துவர் கூறியதாவது, ``மாணவன் குளித்துக் கொண்டிருக்கும்போது, அவருக்கே தெரியாமல் சின்ன சிலேபி மீன் அவனது மூக்குக்குள் சென்றுள்ளது. உறவினர்கள் யாரும் வெளியே எடுக்க முயற்சி செய்யாமல், உடனே மருத்துவமனைக்கு அழைத்துவந்தனர். உடனே சிறுவனுக்கு சிகிச்சையளித்து சிறுவன் மூக்கில் இருந்த மீனை உயிருடனே மீட்டுவிட்டோம்" என்றார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.