புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தை சேர்ந்தவர் ஜாவித்ரகுமான். இவரது மனைவி ஜம்ரத்நிஷா (வயது 26) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) . இவர் சம்பவத்தன்று தனது உறவினரின் மகனான ஒரு சிறுவனை அழைத்துக் கொண்டு மீமிசலில் உள்ள ஏ.டி.எம்.மிற்கு பணம் எடுக்க சென்றுள்ளார்.
அப்போது ஏ.டி.எம். மையத்தில் வேறு ஒருநபர் பணம் எடுத்துக்கொண்டு இருந்ததால் ஜம்ரத் நிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), வெளியில் நின்று கொண்டு சிறுவனிடம் ஏ.டி.எம்.கார்டை கொடுத்து பணம் எடுத்து வருமாறு கூறி உள்ளார். அந்த சிறுவன் அங்கு ஏற்கனவே பணம் எடுத்து கொண்டிருந்தவரிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு கேட்க, அவர் பணத்தை எடுத்து கொடுத்து கார்டையும், சிறுவனிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் ஜம்ரத் நிஷா செல்போன் நம்பருக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் ஏ.டி.எம்.மில் இருந்து ரூ.49 ஆயிரம் எடுத்ததாக வந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஜம்ரத் நிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று கேட்டுள்ளார். பின்னர் வங்கி அதிகாரிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த போது, ஜம்ரத் நிஷா சிறுவனிடம் கொடுத்த ஏ.டி.எம். கார்டை மர்மநபர் வாங்கி கொண்டு, அவரது கார்டை சிறுவனிடம் கொடுத்துள்ளது தெரிந்தது. பின்னர் அந்த நபர் வேறு ஏ.டி.எம். மையத்திற்கு சென்று பணத்தை நூதன முறையில் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஜம்ரத் நிஷா மீமிசல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் அந்த நபர் மீண்டும் அதே ஏ.டி.எம்.மையத்திற்கு பணம் எடுக்க வந்துள்ளார். இதனை மீமிசல் வங்கி மேலாளர் கண்காணிப்பு கேமராவில் பார்த்துள்ளார். இதையடுத்து அவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் மீமிசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த நபரை பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் ராமநாதபுரம் மாவட்டம், பாசிப்பட்டிணத்தை சேர்ந்த செய்யது முகமது மகன் இப்ராகிம் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இப்ராகிமிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி: தினத்தந்தி
Source: https://www.dailythanthi.com/News/Districts/2019/11/29010427/Like-giving-money-at-an-ATMWoman-who-defrauded-woman.vpf
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.