புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டு, தகுந்த பாதுகாப்பு பணிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜன. 2ம் தேதி 13 இடங்களில் நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒரு வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. விராலிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், குன்றாண்டார்கோயில் ஊராட்சி ஒன்றியத்துக்கு கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு மழையூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு அரசு மகளிர் கல்லூரியிலும் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்துக்கு இலுப்பூர் ஆர்சி மேல்நிலைப் பள்ளியிலும், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்துக்கு விவி மேல்நிலைப் பள்ளியிலும், திருமயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு ஜோசப் பாலிடெக்னிக் கல்லூரியிலும், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு கைக்குறிச்சி பாரதி கல்வியியல் கல்லூரியிலும் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அரிமளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு அரசு மேல்நிலைப் பள்ளியிலும், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்துக்கு அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும், மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றியத்துக்கு பரமந்தூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியிலும் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்தந்த ஒன்றியங்களுக்கு உள்பட்ட மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி உறுப்பினர் பதவியிடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் வாக்கு எண்ணிக்கை ஜன. 2ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.