சென்னையில் இருந்து சுமார் 70 கி.மி தொலைவில் காஞ்சிபுரம் அருகே புதிய விமான நிலையம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சென்னை திரிசூலத்தில் தற்போது செயல்பட்டு வரும் விமான நிலையம் நெரிசல் மிகுந்ததாக இருப்பதால் புதிய விமான நிலையத்தை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை செயல்படுத்த இந்த இடத்தை அதிகாரிகள் தேர்வு செய்துள்ளனர்.
சென்னையில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் காஞ்சிபுரம் அருகே உள்ள வெள்ள கேட் எனப்படும் பொன்னேரி கரையில் இருந்து சுமார் 10 கி.மி தொலைவில் பரந்தூர் கிராமம் அமைந்துள்ளது.
இதற்காக பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 12 கிராமங்களில் 4700 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதில் 50% இடம் தமிழ்நாடு அரசு கை வசம் இருக்கிறது. எஞ்சிய 50% இடம் கிராமமக்களிடம் இருந்து அரசு கைப்பற்ற வேண்டியுள்ளது. இந்த இடத்தை கைப்பற்றுவது அரசுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. புதிய விமான நிலையத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை இந்திய விமான நிலைய கட்டுப்பட்டு அதிகாரிகள் இன்னும் ஓரிரு வாரங்களில் ஆய்வு செய்ய உள்ளனர்.
மேலும் தமிழக அதிகாரிகள் புதிய விமான நிலையம் கட்டுவதற்கு செங்கல்பட்டு அருகே உள்ள மாமண்டூர் மற்றும் காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூர் ஆகியே இரண்டு இடங்களை தேர்வு செய்து இந்திய விமான நிலைய கட்டுப்பட்டு துறைக்கு அனுப்பிவைத்தனர். அதில் பரந்தூரில் விமான நிலையம் அமைவதற்கே அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது. காஞ்சிபுரத்தில் இருந்து பரந்தூர் 16 கி.மி தொலைவிலும், அரக்கோணத்தில் இருந்து 24 கி.மி தொலைவிலும் அமைந்துள்ளது. பரந்தூர் அருகே திருமால்பூர், தக்கோலம் போன்ற ஊர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.