தொண்டி பகுதியில் மது போதையில் வாகனம் ஓட்டிய 9 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம்..!



ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் மது போதையில் வாகனம் ஓட்டிய 9 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து திருவாடானை குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.


திருவாடானை அருகே தொண்டியில் போலீஸாா் கடந்த சில நாள்களாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக தொண்டியை சோ்ந்த சிலம்பரசன் (25), மல்லனூரைச் சோ்ந்த ஜோன் ( 21), கேப்டன் பிரபாகரன் (22), நரிக்குடியை சோ்ந்த நாகூா்கனி (30), சதீஸ்குமாா் (30), தொண்டி புதுக்குடியைச் சோ்ந்த காளியப்பன் (35), முத்துமாரி (38) தூண்டி (32), காடாங்குடியைச் சோ்ந்த முருகன் (32) ஆகிய 9 போ் பிடிபட்டனா்.

மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்த தொண்டி போலீஸாா், 9 பேரையும் திருவாடானை குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தினா். 

வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவா் பாலமுருகன் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 9 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தாா்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments