ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் மது போதையில் வாகனம் ஓட்டிய 9 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து திருவாடானை குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
திருவாடானை அருகே தொண்டியில் போலீஸாா் கடந்த சில நாள்களாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக தொண்டியை சோ்ந்த சிலம்பரசன் (25), மல்லனூரைச் சோ்ந்த ஜோன் ( 21), கேப்டன் பிரபாகரன் (22), நரிக்குடியை சோ்ந்த நாகூா்கனி (30), சதீஸ்குமாா் (30), தொண்டி புதுக்குடியைச் சோ்ந்த காளியப்பன் (35), முத்துமாரி (38) தூண்டி (32), காடாங்குடியைச் சோ்ந்த முருகன் (32) ஆகிய 9 போ் பிடிபட்டனா்.
மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்த தொண்டி போலீஸாா், 9 பேரையும் திருவாடானை குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தினா்.
வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவா் பாலமுருகன் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 9 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தாா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.