புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதிகளில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.
புதுக்கோட்டடை மாவட்டத்தில் கறம்பக்குடி பகுதியில் ஒரு அரசு கலை அறிவியல் கல்லூரியும், அறந்தாங்கியில் ஒரு கலை அறிவியல் கல்லூரி உள்ளது.
புதுக்கோட்டையில் மன்னர் கல்லூரி மற்றும் பெண்கள் கலை அறிவியல் கல்லூரி என 4 கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளது. இந்த கல்லூரிகளில் ஏழை எளிய விவசாயிகளின் பிள்ளைகள் சேர்ந்து கலை அறிவியில் படிப்பை படித்து வருகின்றனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் நீண்ட நாட்களாக மாவட்டத்திற்கு அரசு பொறியியல் கல்லூரி வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுவரை பொறியியல் கல்லூரி அமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் அதிக பணம் கொடுத்து தனியார் கல்லூரிகளில் சேர்ந்து பொறியியல் படிப்பு படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அருகாமையில் உள்ள திருச்சி, மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் அரசு பொறியியல் கல்லூரி உள்ளது.
ஆனால் புதுக்கோட்டையில் மட்டும் ஏன் அரசு பொறியியல் கல்லூரி அமைக்கவில்லை என்று தெரியவில்லை. இதனால் இனிவரும் காலங்களிலாவது புதுக்கோட்டை மாவட்டத்திற்கு என தனியாக ஒரு அனைத்து துறைகளுடன் கொண்ட பொறியியல் கல்லூரியை அமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.