ஜம்மு காஷ்மீரில் பதற்றம் அதிகரித்திருப்பதாகவும் அங்குள்ள நிலை குறித்து அவசரமாக விவாதிக்க வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஸி முறையிட்டார். இதுதொடர்பாக கடந்த 12 ஆம் தேதி அவர் கவுன்சிலுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
பாகிஸ்தான் வேண்டுகோளை சீனாவும் இப்போது வலியுறுத்தியுள்ளது. இதையடுத்து, பாதுகாப்பு கவுன்சிலின் ரகசியக்கூட்டத்தை கூட்டி விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதம் காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் சீனா வேண்டுகோளை ஏற்று இதுபோன்ற விவாதம் நடைபெற்றது. நான்கு மாதங்கள் முடிந்த நிலையில் இப்போதும் அங்கும் வெளித்தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் நிலவும் மனித உரிமைப் பிரச்சனைகள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி: நக்கீரன்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.