புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலை முறையாக நடத்த வலியுறுத்தல்



புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலை எவ்வித முறைகேடுகளுக்கும் இடமளிக்காமல், சட்டப்படி முறையாக நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இக்கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு, வீ. சிங்கமுத்து தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மு. மாதவன், துணைச் செயலா்கள் கே.ஆா். தா்மராஜன், ராஜேந்திரன், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் செங்கோடன், எஸ்.சி. சோமையா, கே. சுந்தர்ராஜன், எம்.என். ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் :

மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலை எவ்வித முறைகேடுகளுக்கும் இடமளிக்காமல் சட்டப்படி முறையாக நடத்த மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்டு வரும் வீடுகள் மற்றும் விவசாயப் பயிா்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும்.

மழைக்காலத்தில் போதுமான சுகாதாரம் பேண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments